search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic"

    • தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
    • கலெக்டர் அம்ரித் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் கல்லார் தூரிப்பாலம் சோதனைச்சாவடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்பு கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத் தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் குன்னூர் கல்லார் தூரி பாலம் சோதனை சாவடி பகுதிகளில், மாவட்ட கலெக்டர் அவர்கள் முன்னிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில், கொண்டு வரப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்த போது, வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில், பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.

    ஆய்வின் போது, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மோகன குமார் மங்கலம், உட்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகாரிகள் கடைகளில் நேரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஆய்வின்போது பிளாஸ்டிக் தட்டு, கவர்கள் என 105 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின்படி மாநகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா ஆகியோர் தலைமையில் டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ரதவீதிகளில் உள்ள கடைகளில் நேரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், செல்லப்பாண்டி மற்றும் சங்கரநாராயணன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் முருகேசன், சாகுல், இளங்கோ ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், பாலு சங்கரநாராயணன் முருகன் அந்தோனி, பெருமாள் ஆகியோர் கடைகள் வணிக நிறுவனங்களில் சோதனை செய்தனர்.

    தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், சேக், மேஸ்திரிகள் சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் சூர்யா, மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 4 ரத வீதிகளிலும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், கவர்கள் என 105 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அபராதமாக மொத்தம் ரூ.34,400 விதிக்கப்பட்டது.

    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை யின் பேரில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மற்றும் காகிதம், கண்ணாடி துண்டுகள், தேங்காய் நார், சணல் போன்ற கழிவு பொருட்களில் இருந்து கலை படைப்புகளை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியை மிஞ்சும் வகையில் மாணவிகள் நூற்றுக்கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர்கள் கலை படைப்புகளை பார்வை யிட்டு மாணவிகளின் தயா ரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். இறுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பொருள்களை காட்டு யானைகள் உண்பதாக தகவல்கள் வெளியாகின.
    • குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வன பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன.

    குன்னூா்- மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவது வழக்கம். சுற்றுலாப் பயணிகள் மலை ெரயிலில் பயணிக்கும்போது வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருள்களை காட்டு யானைகள் உண்பதாகவும், யானை கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதை தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கெளதம் ஆலோசனையின்படி, குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனவா் கோபாலகிருஷ்ணன் வனகாப்பாளா்கள் திலீப், லோகேஷ் விக்ரம் அடங்கிய குழுவினா் ரன்னிமேடு ரெயில் நிலையத்தில் தொடங்கி மலை ரெயில் பாதை வரை கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

    ெரயில் பாதையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுலா பயணிகள் வீசி செல்வதால், ரெயிலில் ஏறும்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயணிகளிடம் இருந்தால் அதனை ரெயில்வே பணியாளா்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.

    மேலும், ரெயில்வே நிா்வாகம் அவ்வப்போது மலை ரெயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக்கை சுத்தம் செய்தால் மட்டுமே வன விலங்குகளை பாதுகாக்க முடியும் என்று வனவிலங்கு ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

    • மாநகரில் 4 மண்டலங்களிலும் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நெல்லை டவுனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகரில் 4 மண்டலங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் முன்னிலையில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. டவுன் தெற்கு மவுண்ட் ரோடு, கல்லணை தெரு, மேல மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் இன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படு கிறதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 11 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,400 அபராதமாக விதிக்கப்பட்டது.

    • பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
    • தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மைபணி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

    மேலும், கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர்கள் லெப்டினன்ட் அப்பாஸ் மற்றும் டி.ஒ. அமீர் காசிம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிளாஸ்டிக்கால் ஆண்டுக்கு 10 லட்சம் உயிரினங்கள் உயிரிழப்பு
    • அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் அறிவுறுத்தல்

    அரியலூர்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அகல்யா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது.உலகம் முழுவதும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதால் உயிரினங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன . இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் நெகிழி பொருள்கள் இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். தற்போது 50,000 கோடி நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகின்றன .ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் மாசுபடுத்துகின்றன. ஆண்டொன்றுக்கு 10 லட்சம் உயிரினங்கள் நெகிழிப் பொருள்களால் இறந்து விடுகின்றன .பாட்டிலில் குடிக்கின்ற குடிநீரிலும், குழாய்களில் வருகின்ற குடிநீரிலும் நெகிழி துகள்கள் உள்ளன .எனவே ஒவ்வொரு மனிதனும் இனி வாழ்நாளில் நெகிழிப் பொருள்களை தவிர்க்க வேண்டும். மாணவர்களும், பொது மக்களும் துணிப்பை பயன்படுத்த வேண்டும் . அன்றாட பயன்பாட்டிற்காக செல்லும் பொழுது எப்பொழுதும் துணிப்பையுடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதரும் குறைந்தபட்சம் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றார். பின்னர் அவர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாணவ,மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் துணிப் பைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தடைசெய்தல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி ராதாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்றது.
    • ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

    வள்ளியூர்:

    ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தடைசெய்தல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி ராதாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்றது. பேரணியை பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது. பேரணியின் போது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடைசெய்ய வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    வருங்காலங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோர் மீது ஊராட்சி சட்டம் 1994-ன் படி அபராதம் விதிக்கப்படும் மற்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    பேரணியில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அரவிந்தன், ஊராட்சி துணை தலைவர் பலவேசம், வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவரோச் சுபாணந்தி, ஊராட்சி செயலர் மாரியப்பன், ஊர் பொதுமக்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு முறை உபயோகிக்கும் நெகிழியை தவிர்போம் என்று கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பொதுமக்களின் வீடுகள், கடைகளில் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் ஊராட்சி சித்தூர் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமையில் சித்தூர் தேரடியில் இருந்து பஸ் நிலையம் வரை நடை பெற்றது. ஒரு முறை உபயோகிக்கும் நெகிழியை தவிர்போம் என்று கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பொதுமக்களின் வீடுகள், கடைகளில் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. பேரணியில் தூய்மை காவலர், சுகாதார பணியாளர், ஊராட்சி செயலர் இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
    • நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள்.

    சென்னை:

    நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

    மனித கழிவுகளில் பிளாஸ்டிக் இருப்பது 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பறவைகள், விலங்குகள், கடல்வாழ் உரியிரினங்கள் ஆகியவற்றின் கழிவுகளிலும் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

    இந்த நிலையில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானம் குடிப்பது, பிளாஸ்டிக் பார்சல்களில் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள். அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். இதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது தெரியவந்தது. இதில் குளிர்பான பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் 50 சதவீதம் அளவுக்கு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு அடுத்த படியாக உணவு பார்சல், டீ, காபி கப்புகள், தண்ணீர் பாட்டில்களின் பிளாஸ்டிக் கலந்துள்ளது. மேலும் 23 சதவீத பிளாஸ்டிக், பழங்களை பார்சல் செய்து விற்பனை செய்யும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும்.

    உணவு, தண்ணீர், காற்று மாசு ஆகிய 3 வழிகள் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனிதனின் உடலில் கலக்கின்றன. இதில் காற்று மாசு என்பது சுவாசத்தின் மூலம் நுரையீரல் வழியாக ரத்தத்தை அடைகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர் பானம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் அதிக பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருந்தால் வீட்டை காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் காற்றுமாசுவில் இருந்து தப்பிக்க முடியும்.

    பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில்களை பயன்படுத்துவதால் குழந்தைகள் பிளாஸ்டிக் நுண்துகள்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது என்பது ஆபத்தானது. மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பதால் உடல் உறுப்புகளை பாதிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. அது என்னென்ன உடல் உறுப்புகளை பாதிக்கும் என்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வருகிற 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வருகிறது.

    இதனை யொட்டி நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி, முதற்கட்டமாக கோடியக்காட்டில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாகப்பகுதியில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையில், கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

    தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் கூறுகையில்:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விழிப்புணர்வு முகாமும், 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமும், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கடற்கரை தூய்மை படுத்தும் பணியும், நிறைவாக 5-ந் தேதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால்  மண்வளம் பாதிப்பதோடு நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விடும் அபாயம் உள்ளது.
     
    கடந்த காலங்களில் அனைத்து தேவைகளுக்கும் துணி பைகளையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். கால மாறுபாட்டின் காரணமாக சிறிய பெட்டிகடைகள் முதல் பெரிய மளிகை கடைகள் வரை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து சஞ்சய்விட்டது. பிளாஸ்டிக் பைகள் மக்கும் திறன் இல்லாததால் இந்த பைகள் மண்ணில் மக்காமல் புதையுண்டு நிலத்தடிநீர் தேங்குவதை தடுக்கிறது. மேலும் மண் வளத்தையும் பாதிக்கச்செய்கிறது.

    தற்போது பிளாஸ்டிக் கப் மற்றும் பாட்டில்கள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் குவிகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் புதையுண்டு மண் வளத்தை பாதிக்க செய்கிறது. மேலும் வெளியிடங்களில் மது அருந்துபவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் கப்புகளை விட்டு செல்வதால் வயல்காடுகள் முதல் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரித்து விட்டது. 

    இனிவரும் காலங்களில் இந்த பிளாஸ்டிக் பொருள்களால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 
    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

    இதன் காரணணமாக பிளாஸ்டிக் பயன்பாடு 95 சதவீதம் குறைந்தது. தற்போது கீழக்கரையில் நகராட்சி அதிகாரிகள்  பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டு கொள்ளாமல் உள்ளனர். 

    இதை சாகமாக்கிய சில வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.ஆகவே பிளாஸ்டிக் பைகள் தாரளமாக புழக்கத்தில் உள்ளது. பிளாஸ்டிக் பாதிப்பின் தன்மை உணர்ந்து இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ×