என் மலர்
நீங்கள் தேடியது "seize"
பண்டிகை காலங்களில் தங்கத்துக்கான மதிப்பு அதிகரிப்பதை மையமாக கொண்டு தங்க கடத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, 6.995 கிலோ எடைகொண்ட தங்கத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அதன் மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து, 82 ஆயிரத்து 715 ரூபாய் என தெரிவித்துள்ளனர். #ChennaiAirport #GoldSmuggling #DRI
விழுப்புரம்:
புதுவை மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மதுபானங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதுபோல் மாவட்ட எல்லை முழுவதும் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மதுபானம் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனிச்சம் குப்பம் என்ற இடத்தில் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணிக்கு புதுவையிலிருந்து அதி வேகமாக வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 700-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் புதுவை மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மதுபானம் கடத்தியது தெரியவந்தது. மேலும் கார் டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யார் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் (வயது 32) கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கார் கோட்டகுப்பம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் மீது பென்ஸோயேட் மற்றும் அம்மோனியா ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வெளியானது. இந்த வகை வேதிப்பொருட்களால் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வேதிப்பொருட்கள் கலந்த மீன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள மீன்கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் இருந்து மீன்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, சுமார் ஆயிரத்து 666 கிலோ எடை கொண்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்கள் இறக்குமதி செய்பவர்களிடமும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Nagaland