search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
    X

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினரின் அதிரடி சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ChennaiAirport #GoldSmuggling #DRI
    சென்னை:

    பண்டிகை காலங்களில் தங்கத்துக்கான மதிப்பு அதிகரிப்பதை மையமாக கொண்டு தங்க கடத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி, இன்று சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் கடத்தல் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.



    இதையடுத்து, 6.995 கிலோ எடைகொண்ட தங்கத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அதன் மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து, 82 ஆயிரத்து 715 ரூபாய் என தெரிவித்துள்ளனர். #ChennaiAirport #GoldSmuggling #DRI
    Next Story
    ×