search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மை பணி
    X

    புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்.

    புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மை பணி

    • பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
    • தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மைபணி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

    மேலும், கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர்கள் லெப்டினன்ட் அப்பாஸ் மற்றும் டி.ஒ. அமீர் காசிம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×