என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "plane"
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ பவுண்டுலேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து விமானம் புறப்பட தயாரானது. ஆனால் கடும் பனி கொட்டியது. தட்பவெட்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆனது. எனவே விமானம் இயங்காமல் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.
விமானத்தின் கதவு பனிப்பொழிவால் உறைந்து விட்டது. இதனால் திறக்க முடியவில்லை. எனவே பயணிகளால் வெளியே செல்ல முடியவில்லை. பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். போர்த்திக்கொள்ள மெல்லிய கம்பளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரம் கடும் குளிரில் நடுங்கியபடி அவதிப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து காபி மற்றும் நொறுக்கு தீனி வழங்கப்பட்டது. பொழுது விடிந்த பிறகு வெயில் பட்டதும் விமானத்தின் கதவு திறக்க முடிந்தது. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறி பஸ் மூலம் வேறு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மதியம் அவர்கள் மீண்டும் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். #Canada #UnitedAirlines
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கினர். விமானத்தில் பயணிகள் விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை, பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலை 6.33 மணியளவில் விமானம் கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கி உள்ளனர். விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. #LionAirFlight #PlaneMissing
பெங்களூர்:
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.
லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெற வில்லை.
மல்லையாவிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் மல்லையா மீது வரி ஏய்ப்பு புகார்களும் உள்ளன. குறிப்பாக சேவை வரித்துறைக்கு அவர் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அந்த சேவை வரியை வசூலிக்க, விஜய் மல்லையாவின் குட்டி விமானத்தை சேவை வரித்துறை அதிகாரிகள் 2013-ம் ஆண்டு முடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் விற்பனை செய்து பணத்தை பெற சேவை வரித்துறையினர் அறிவிப்பு செய்தனர். முதல் தடவை நடந்த ஏலத்தில் யாரும் அதிக பணத்துக்கு ஏலம் கேட்க வில்லை. இரண்டாவது நடந்த ஏலத்திலும் அதிக தொகை கேட்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது முறையாக அந்த குட்டி விமானம் ஏலம் விடப்பட்டது. அப்போது மல்லையாவின் விமானம் ரூ. 35 கோடிக்கு ஏலம் போனது. அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் எடுத்துள்ளது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மல்லையாவின் விமானம் ஏலம் போய் இருக்கிறது. 650 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம் 5 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் தற்போது பறக்கும் நிலையில் இல்லை. இதனால்தான் அந்த விமானம் மிக, மிக குறைவாக ரூ.35 கோடிக்கு ஏலம் போனதாக தெரிய வந்துள்ளது.
இந்த சொகுசு விமானத்தில் 25 பேர் பயணம் செய்யலாம். விமான பைலட், பணிப்பெண்கள் 6 பேர் இருந்தனர். இந்த சொகுசு விமானத்துக்குள் படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்த பார் வசதி, கான்பரன்ஸ் ஹால் ஆகிய வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ##vijaymallya #tamilnews
‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார். இவர் பயணம் செய்த விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானம், திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி செல்ல ஏற்பாடாகி இருந்தது.
அதன்படி திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பி விட்டு, பிற்பகல் 2.08 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மாலி வான்பரப்பை மாலை 4.44 மணிக்கு கடந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தின் கட்டுப்பாடு மொரீஷியஸ் கட்டுப்பாட்டு அறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் மொரீஷியஸ் வான்பரப்பை அடைந்த அந்த விமானத்தால், அந்த நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அது ரேடாரின் இணைப்பில் இருந்து விடுபட்டு திடீரென மாயமானது. இதனால் மொரீஷியஸ் விமான போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுஷ்மாவின் விமானம் நடுவானில் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே ‘இன்செர்பா’ (நிச்சயமற்ற நிலை) எனப்படும் உஷார் நிலையை பிறப்பித்தனர். பிரச்சினையில் சிக்கும் விமானங்களை மீட்கும் விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் முதல் கட்ட உஷார் நிலை இதுவாகும்.
எனினும் 14 நிமிடங்களுக்குப்பின் அதாவது மாலை 4.58 மணிக்கு சுஷ்மாவின் விமானம் மொரீஷியஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டது. பின்னர் அது மொரீஷியசில் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பின்னரே விமானப்போக்குவரத்து அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதைத்தொடர்ந்து சுஷ்மா சுவராஜ், அங்கிருந்து புறப்பட்டு தென் ஆப்பிரிக்கா போய் சேர்ந்தார். அங்கு அவரை தென் ஆப்பிரிக்க வெளியுறவு துணை மந்திரி லவெல்லின் லாண்டர்ஸ் வரவேற்றார். தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளை ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தின் 125-வது நினைவையொட்டி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
சுஷ்மாவின் விமானம் சென்ற கடற்பரப்புக்கு மேலான அந்த பாதையில் அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. எனவே விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இதுபோன்று விமானங்கள் மாயமானால் 30 நிமிடம் வரை காத்திருப்பது வழக்கம். அதன் பின்னரே ‘உஷார்’ நிலை பிறப்பிப்பார்கள்.
ஆனால் இந்த விமானத்தில் சென்றது முக்கிய பிரமுகர் (மந்திரி) என்பதால் 30 நிமிடம் காத்திராமல், உடனே ‘உஷார்’ நிலையை பிறப்பித்திருக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SushmaSwaraj #tamilnews
அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர்’ கேட்டார். அவரும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மற்றொரு ‘பீர்’ கேட்டார்.
போதை அதிகமானதால் தர அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் பாத்ரூம் சென்ற அவர் வெளியே வராமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்து இருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.
அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் கட்டுப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் அவர் பிளேடால் தனது உடலை கிழித்து கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது.
இதற்கிடையே விமானம் செயின்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்