search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "participation"

    • புதிய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை போராட்டம் நடைபெற இருக்கிறது.
    • துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு.

    பேராவூரணி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் சமூக நல்லிணத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த அடிப்படையில் பேராவூரணியில் மனித சங்கிலி போராட்டம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், உழைக்கின்ற தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி செயலாளர் அரவிந்த் குமார் தலைமையில் நடைபெற்றது.

    பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மைதீன், திராவிடர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், தி.வி.க மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், தமிழக மக்கள் புரட்சி கழகம் மதியழகன், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெங்கடேசன் மற்றும் அப்துல் சலாம், முஜிபுர், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக விசிக பேராவூரணி ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    • சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர்.

    சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவு நீர் வாறுகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்-குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த குறைகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து சரி செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முறையிட்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம்.
    • தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    ஒன்றிய அரசைகண்டித்து 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் 30 ஆவது மாநில மாநாடு ; செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடுவிவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

    நாகை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாநாட்டின் லோகோவை நாகை மாலி எம்.எல்.ஏ வெளியிட விவசாய சங்க தலைவர்கள் பெற்று க்கொண்டனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சண்முகம் கூறுகையில் ;

    ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30வது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெறுகிறது.

    மாநிலம் முழுவதுமுள்ள 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    கேரளா மாநில நிதித்துறை அமைச்சர் பால கோபால் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், தொழிற் சங்கங்கள்பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம், மின்சார திருத்த சட்டம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவித்தார்கள்.

    குறிப்பாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்புக்கு டன்னுக்கு 4000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    அதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். ஊஎனவே இறால் பண்ணை களை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.
    • உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.

    மலர் மாலை, மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆலய நிர்வாகிகளான ஜெயக்குமார், வித்யாபதி, கதிர் பாலசுப்பிரமணியம், அன்பழகன், ராஜசேகரன், ஆனந்த், மணி, மனோகரன், பன்னீர்செல்வம், குமரவேல்,பரமேஸ்வரி, கங்காதரன், அப்பகுதியை சேர்ந்த பாலு, அன்பழகன், ராஜா, சேவியர், ஜோதிகுமார், இஸ்மாயில், லிகோரின், அலெக்ஸ், அசோக், மகேஷ், சூர்யா, ரஞ்சித், மோகன், ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டு புகழ் பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.

    இங்கு 128-ம் ஆண்டு திருஇருதய தேர்பவனி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. இங்கு மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலைகூட்டுதிருப்பலி பூஜை, மாலை திருவிழா திருப்பலி பூஜைகளை மறைமாவட்ட பரிபாலக ஆயர் ஸ்டீபன் அந்தோணி நடத்தினார்.

    இதில் பல்வேறு ஊர்களில் உள்ள அருட்பணியாளர்கள் ஏசுவின் இறை செய்திகளை வாசித்தனர். நிறைவாக ஆலயம் முன் திருஇருதய ஆண்டவர் அழகிய சொரூபம் மின்சார தேரில்அலங்கரிக்கப்பட்டு இடைக்காட்டூர் தெருக்களில் வலம் வந்து திருத்தலத்தை அடைந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்கள் நன்றி செலுத்தும் திருப்பலியில் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன் , இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் , செல்ஸ் பேரவை உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    • புதிய கட்டிட திறப்பு விழா தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள ரிதம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு ஜப்பான் நாட்டு தூதர் டாகா மயசுகி நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தனுஷ்குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்வில் பேசிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்று த்திறன் உள்ளது. அதனைக் கண்டறிவது, வாழ்வில் முன்னேற்றமடைய செய்வது ஆசிரியர்களின் கடமை ஆகும. அதுபோல் இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் தி.மு.க.வும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் உறுதுணையாக இருப்பதாக கூறினார்.

    விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
    • ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் விளையாட்டுத்துறை) சார்பில் நடைபெற உள்ள மாவட்ட கேரம் போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பாண்டுக்கான கேரம் போட்டி வரும், 29-ந் தேதி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாவட்டத்தைச்சேர்ந்த 5-ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முதல்பரிசு ஆயிரம் ரூபாய், 2வது மற்றும் 3வது பரிசு முறையே 500 மற்றும், 250 ரூபாய்.ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.மாணவர்கள் தங்களின் முழுவிபரங்களை sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.போட்டியாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கு எண், பாஸ்புக், பள்ளியில் பயில்வதற்கான படிப்பு சான்றிதழ் தலைமை ஆசிரியர்களிடம் பெற்று போட்டிக்கு வரவேண்டும். போட்டி நடக்கும் நாளன்று காலை, 8:30 மணிக்கு அரங்கில் இருத்தல் வேண்டும். தகவல்களுக்கு 7401703515 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனை காரணமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அவர்களுடன் காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    நேற்று தி.மு.க. நடத்திய மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனால் நேற்று அவர்கள் சட்டசபைக்கு வரவில்லை.

    இன்று காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். #TNAssembly
    மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இம்மாத இறுதியில் நடக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொள்கிறார்.#Chennai #Metro #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் சுரங்கப்பாதையில் நிறைவடைந்த பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்து வருகிறார். கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஷெனாய்நகர் 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா- எழும்பூர் இடையிலான பணிகளை ஆய்வு செய்தார். இந்த பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்வது உள்ளிட்ட சில ஆலோசனைகளை பாதுகாப்பு ஆணையர் கூறினார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் சென்று ஆய்வு செய்கிறார். தொடர்ந்து மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சோதனை செய்கிறார். இந்தபணி 2 நாட்கள் நடக்கிறது. இதனை தொடர்ந்து 19-ந்தேதி (சனிக்கிழமை) ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்ப இருக்கிறார்.

    பாதுகாப்பு ஆணையர் ஆய்வுப் பணியை முடித்துவிட்ட பிறகு, பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனை தொடர்ந்து நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கான விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும்.



    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவார்கள்.

    29-ந்தேதி பவுர்ணமியாக இருப்பதால் அன்று மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். #Chennai #Metro #EdappadiPalanisamy
    ×