search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு
    X

    அனைத்து கட்சியினரின் ஆலோசனை கூட்டம்.

    மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

    • புதிய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை போராட்டம் நடைபெற இருக்கிறது.
    • துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு.

    பேராவூரணி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் சமூக நல்லிணத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த அடிப்படையில் பேராவூரணியில் மனித சங்கிலி போராட்டம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், உழைக்கின்ற தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி செயலாளர் அரவிந்த் குமார் தலைமையில் நடைபெற்றது.

    பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மைதீன், திராவிடர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், தி.வி.க மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், தமிழக மக்கள் புரட்சி கழகம் மதியழகன், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெங்கடேசன் மற்றும் அப்துல் சலாம், முஜிபுர், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக விசிக பேராவூரணி ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    Next Story
    ×