search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Rail Service"

    • திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • மெட்ரோ துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி மாநகராட்சி பகுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடர்பான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் பேசியதாவது:-

    தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல், திருச்சி மாநகராட்சியிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதற்கான முதற்கட்ட ஆலோசனைதான் இது. இந்த சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் திருச்சி மாநகராட்சிக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் மெட்ரோ துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்படும்.

    மேலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்சி மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்து திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கு தேவையான ஒருங்கிணைந்த நகர்வுத்திட்டம் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும்.

    ஒருங்கிணைந்த நகர்வுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே திருச்சி மாநகரத்திற்கு உகந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து அமைப்பினை தேர்வு செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன முதன்மை மேலாளர்கள் ஆர்.எம்.கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கேசவன், மாநகராட்சி செயற் பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் முத்தையா, உதவி கோட்ட பொறியாளர் சத்தியன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரிப்பன் கட்டிடம் எதிரில் பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக பிரமாண்டமான முறையில் 2 அடுக்குகளுடன் சுரங்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் 2-வது வழித்தடமான சென்டிரல்- பரங்கிமலை இடையே உள்ள 2 வழித்தடங்களில் இருந்து வரும் ரெயில்களை நிறுத்துவதற்காக சென்டிரலில் 2 அடுக்குகளில் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தரை தளத்தில் இருந்து 60 அடி ஆழம் மற்றும் 100 அடி ஆழத்தில் இந்த 2 ரெயில் நிலையங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதில் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலைய கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரெயில் நிலையத்துக்கு தற்போது சென்டிரலில் இருந்து விமான நிலையம் வரை பணிகள் நிறைவடைந்த பாதையில் இருந்து வரும் ரெயில்கள் வந்து செல்கின்றன. சென்டிரல்- வண்ணாரப்பேட்டை இடையே பணிகள் நடந்து வருகிறது.

    ஏ.ஜி-டி.எம்.எஸ்- ஆயிரம் விளக்கு- எல்.ஐ.சி.- அரசினர் தோட்டம் வழியாக சென்டிரல் வரும் பாதையில் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்த உடன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையத்துக்கு ரெயில்கள் வர இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் தரையில் கற்கள் பதிக்கும் பணி, அலங்கார விளக்குகள், பயணிகளுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இது சென்னையில் உள்ள சுரங்க ரெயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்டிரல் சுரங்க ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு ரெயில்வே தலைமையகம், பூங்கா மற்றும் பூங்கா டவுன் ரெயில் நிலையங்கள், ரிப்பன் கட்டிடம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்டிரல், பூங்கா மற்றும் பூங்கா டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகளும் சுரங்க ரெயில் நிலையத்தை எளிதாக சென்றடைய முடியும். இந்த ரெயில் நிலையங்களில் 1 லட்சம் பயணிகள் வரை கையாளும் வசதி உள்ளது. அத்துடன் 500 கார்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்களுக்கான நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்காக தனியாக விமான நிலையத்தில் இருக்கும் நடைமுறைகளை (செக்-இன்) செயல்படுத்தும் மையம் போன்ற வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

    சுரங்க ரெயில் நிலையத்துக்கு மேலே டவுன் பஸ்கள் நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறது. மின்சக்தி மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்குவதற்கு துணை மின் நிலையம் மற்றும் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையத்தில் உணவு கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், டிக்கெட் விற்பனைக்காக 14 டிக்கெட் கவுண்ட்டர்கள், 15 லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    லண்டன், நியூயார்க், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய வசதிகளை பார்வையிட்டு அதே போன்று சென்டிரல் ரெயில் நிலையத்திலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 100 அடி ஆழத்தில் உள்ள பிரமாண்டமான ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 
    சென்டிரல் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழாவை வருகிற 25-ந்தேதி நடத்துவதற்கான தீவிர ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் நடந்துவரும் மெட்ரோ ரெயில் பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்தார். சின்னமலை-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தார். கடந்த 20-ந்தேதி ஆய்வுப்பணியை முடித்து கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்பினார்.

    பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 
    மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இம்மாத இறுதியில் நடக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொள்கிறார்.#Chennai #Metro #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் சுரங்கப்பாதையில் நிறைவடைந்த பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்து வருகிறார். கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஷெனாய்நகர் 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா- எழும்பூர் இடையிலான பணிகளை ஆய்வு செய்தார். இந்த பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்வது உள்ளிட்ட சில ஆலோசனைகளை பாதுகாப்பு ஆணையர் கூறினார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் சென்று ஆய்வு செய்கிறார். தொடர்ந்து மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சோதனை செய்கிறார். இந்தபணி 2 நாட்கள் நடக்கிறது. இதனை தொடர்ந்து 19-ந்தேதி (சனிக்கிழமை) ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்ப இருக்கிறார்.

    பாதுகாப்பு ஆணையர் ஆய்வுப் பணியை முடித்துவிட்ட பிறகு, பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனை தொடர்ந்து நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கான விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும்.



    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவார்கள்.

    29-ந்தேதி பவுர்ணமியாக இருப்பதால் அன்று மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். #Chennai #Metro #EdappadiPalanisamy
    ×