search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்டிரலுக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து 25-ந்தேதி தொடக்கம்? அதிகாரிகள் தீவிர ஆலோசனை
    X

    சென்டிரலுக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து 25-ந்தேதி தொடக்கம்? அதிகாரிகள் தீவிர ஆலோசனை

    சென்டிரல் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழாவை வருகிற 25-ந்தேதி நடத்துவதற்கான தீவிர ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் நடந்துவரும் மெட்ரோ ரெயில் பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்தார். சின்னமலை-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தார். கடந்த 20-ந்தேதி ஆய்வுப்பணியை முடித்து கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்பினார்.

    பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 
    Next Story
    ×