என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் சேவை தற்காலிக நிறுத்தம்- பயணிகள் அவதி
- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்," தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story






