search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்த மாதம் விவசாய சங்கத்தின் மாநில மாநாடு
    X

    அடுத்த மாதம் விவசாய சங்கத்தின் மாநில மாநாடு

    • மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம்.
    • தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    ஒன்றிய அரசைகண்டித்து 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் 30 ஆவது மாநில மாநாடு ; செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடுவிவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

    நாகை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாநாட்டின் லோகோவை நாகை மாலி எம்.எல்.ஏ வெளியிட விவசாய சங்க தலைவர்கள் பெற்று க்கொண்டனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சண்முகம் கூறுகையில் ;

    ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30வது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெறுகிறது.

    மாநிலம் முழுவதுமுள்ள 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    கேரளா மாநில நிதித்துறை அமைச்சர் பால கோபால் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், தொழிற் சங்கங்கள்பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம், மின்சார திருத்த சட்டம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவித்தார்கள்.

    குறிப்பாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்புக்கு டன்னுக்கு 4000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    அதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். ஊஎனவே இறால் பண்ணை களை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×