கேரம் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் விளையாட்டுத்துறை) சார்பில் நடைபெற உள்ள மாவட்ட கேரம் போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பாண்டுக்கான கேரம் போட்டி வரும், 29-ந் தேதி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாவட்டத்தைச்சேர்ந்த 5-ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முதல்பரிசு ஆயிரம் ரூபாய், 2வது மற்றும் 3வது பரிசு முறையே 500 மற்றும், 250 ரூபாய்.ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.மாணவர்கள் தங்களின் முழுவிபரங்களை sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.போட்டியாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கு எண், பாஸ்புக், பள்ளியில் பயில்வதற்கான படிப்பு சான்றிதழ் தலைமை ஆசிரியர்களிடம் பெற்று போட்டிக்கு வரவேண்டும். போட்டி நடக்கும் நாளன்று காலை, 8:30 மணிக்கு அரங்கில் இருத்தல் வேண்டும். தகவல்களுக்கு 7401703515 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com