search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருஇருதய ஆண்டவர்  ஆலய தேர்பவனி
    X

    திருப்பலியில் பங்கேற்றவர்கள்.

    திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி

    • திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டு புகழ் பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.

    இங்கு 128-ம் ஆண்டு திருஇருதய தேர்பவனி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. இங்கு மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலைகூட்டுதிருப்பலி பூஜை, மாலை திருவிழா திருப்பலி பூஜைகளை மறைமாவட்ட பரிபாலக ஆயர் ஸ்டீபன் அந்தோணி நடத்தினார்.

    இதில் பல்வேறு ஊர்களில் உள்ள அருட்பணியாளர்கள் ஏசுவின் இறை செய்திகளை வாசித்தனர். நிறைவாக ஆலயம் முன் திருஇருதய ஆண்டவர் அழகிய சொரூபம் மின்சார தேரில்அலங்கரிக்கப்பட்டு இடைக்காட்டூர் தெருக்களில் வலம் வந்து திருத்தலத்தை அடைந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்கள் நன்றி செலுத்தும் திருப்பலியில் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன் , இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் , செல்ஸ் பேரவை உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×