search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NR Dhanapalan"

    • ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக 2 ஆண்டுகளும், மதுரை ஜில்லா சபை தலைவராக 4 ஆண்டுகளும் பதவி வகித்தார்.
    • 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று தலைமை தாங்கி மாநாட்டை வெற்றி மாநாடாக்கினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தி.நகர் பனகல் பூங்காவில் சென்னை வாழ் நாடார் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள பட்டி வீரன்பட்டி 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் திருவுருவ சிலையை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் மறைந்த அன்றைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14.4.1992-அன்று வைத்தார். சிலையை திறந்து வைத்த ஜெயலலிதா பாண்டிபஜார் சாலையின் பெயரை 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அங்காடி சாலை என்றும், பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அங்காடி சாலை காவல் நிலையம்' என்றும் பெயர் வைத்து மறைந்த தலைவரின் புகழுக்கு பெருமை சேர்த்தார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த காலம் வரை அப்பெயரே நீடித்து வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் அங்காடி சாலை என்கிற பெயரை மாற்றி தியாகராயர் சாலை என்று பெயர் பலகை வைத்திருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரும், கொடைக்கானல் மலையில் காப்பி தோட்ட உரிமையளரும் பெரும் நிலக்கிழாரும், மெத்த படித்தவரும், சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளருமானவர் 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் ஆவார். 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக நீதிக்கட்சி தலைவர் பி.டி.ராஜன் பரிந்துரையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக 2 ஆண்டுகளும், மதுரை ஜில்லா சபை தலைவராக 4 ஆண்டுகளும் பதவி வகித்தார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று தலைமை தாங்கி மாநாட்டை வெற்றி மாநாடாக்கினார்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் ஏற்றம் பெறவும், தீண்டாமை ஒழியவும் பாடுபட்ட மாபெரும் தலைவரின் பெயரிலான பாண்டிபஜார் வீதிக்கு மீண்டும் அச்சம் அகற்றிய அண்ணல் 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் கடை வீதி' என்று பெயர் சூட்டி மறைந்த தலைவரின் மங்கா புகழுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார்.
    • தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார். தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார். கம்யூனிஸ்டு கட்சி வழங்கிய ரூ.1 கோடி நிதி உதவியை கட்சிக்கே மீண்டும் திருப்பி நன்கொடையாக வழங்கிய பண்பாளர்.

    இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்பவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதும், அத்துடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    • அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
    • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் தடையின்றியும், கட்டண உயர்வின்றியும் இருந்து வந்த நிலையில் திடீரென தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பதும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகத்தை ஆளும் இன்றைய தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் வெளியிட்டு வந்த அறிக்கையும், பொய் பிரச்சாரங்களையும் திரும்பி பார்க்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்த உடன் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விரைவு பஸ் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறையாமை, தமிழகம் முழுவதும் ரவுடிகள் அட்டகாசம், அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் ஆளும் தி.மு.க.வினரின் அடாவடித்தனம், திராவிட மாடல் என்ற போர்வையில் மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் இன்றைய அரசின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல.

    இந்த அதிரடியான மின் கட்டண உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது போல் இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று என்.ஆர். தனபால் தெரிவித்தார். #DMK #NRDhanapalan
    சென்னை:

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455 வாக்குகள் பெற்றிருந்தார். அதாவது 519 வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.தனபாலன் தோல்வி அடைந்திருந்தார்.

    இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் அறிவித்த தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று கூறி விட்டனர். தற்போது 18 தொகுதிகளும் காலியான தொகுதியாக உள்ளது.

    இந்த தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி என 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 519 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

    இதுபற்றி என்.ஆர்.தனபாலனிடம் ‘மாலைமலர்’ நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-


    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டேன். இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ‘சீட்’ கேட்பேன். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த பிறகுதான் இது குறித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க.விடம் தோற்றது. இதற்கிடையே அத்தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மீண்டும் போட்டியிடுமா? என்று அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தி.மு.க.விடம் கேட்பது பற்றி தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். #DMK #NRDhanapalan
    கேரளாவில் புதிய அணை கட்ட மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும் என என்ஆர் தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லை பெரியாரில் ஏற்கனவே 123 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய அணை நல்ல நிலையில் இருக்கிறபோது புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல் அனுமதி வழங்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு செல்வாக்கும், வாக்கு வங்கியும் இல்லாததால் தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    பெருந்தலைவர் காமராஜரின் 44-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு என்ஆர் தனபாலன் தலைமையில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் 44-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை (செவ்வாய்) கிண்டியில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடக்கிறது.

    காமராஜர் மீது பற்று கொண்ட தொண்டர்கள், விசுவாசிகள், காமராஜர் காட்டிய நல்வழியில் வாழும் பொதுமக்கள், சமுதாய சொந்தங்கள் என அனைவரும் எனது தலைமையில் நடைபெறும் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். #tamilnews
    நடிகர் கருணாசின் அவதூறு பேச்சுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #actorkarunas

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் கருணாஸ் நாடார் சமுதாயத்தை இழிவாகவும், கேவலமாகவும், தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

    அமைதியாக வாழ்ந்து வரும் நாடார் சமுதாய மக்களை சீண்டி பார்க்க ஆசைப்படுகிறாரா? அமைதியையே விரும்பும் நாடார் சமுதாய மக்களை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்” என்று கூறி உள்ளார்.


    சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், “பொது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கருணாஸ் பத்திரிகை நடத்தும் நாடார் சமுதாயத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளது கண்டனத்திற்குறியது. பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று பொதுமக்களிடையே ஜாதி துவே‌ஷத்தை தூண்டும் இவ்வித பேச்சுக்களை கருணாஸ் தவிர்க்க வேண்டும்” என்று கூறி உள்ளார். #actorkarunas

    தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது என்று என்.ஆ.தனபாலன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது.

    மக்களின் சந்தேகங்களை போக்குவதற்காகவும், தமிழக அரசு மீதுள்ள களங்கத்தை போக்கிடவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சாமி சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் மீண்டும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு முழுமையான விசாரணையை தொடர்ந்திட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×