search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர் தனபாலன்"

    • அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
    • இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகமெங்கும் கொண்டாப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் என தருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் திகழும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    'நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்' என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    கிறிஸ்துவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், 1951-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்துவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2023-ல் மக்கள்தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

    எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெருகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    கிறிஸ்தவத்தை, உலகெங்கும் வாழும் மக்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள மகத்தான பேராளுமையே இயேசு பெருமான் ஆவார். அவரை நினைவு கூர்ந்து இந்நாளில் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதாவது, உலகமெங்கும் சகோதரத்துவத்தை மென்மேலும் வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இந்த நன்னாளில் யாவரும் உறுதியேற்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    காங்கிரஸ் சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.:-

    மானுடர்களுக்கு இயேசு பிரான் அருளிய அற்புதமான போதனைகளை கடைபிடித்து நாட்டில் அமைதி, சமாதானம் மேலோங்கிடவும், வன்முறை ஒழிந்திடவும், அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பொங்கிடவும், சாதி, மத, இன வேற்றுமைகளை மறந்து நல்லிணக்கம் பேணிக்காப்பதற்கு இந்நன்நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிறிஸ்து இயேசு பிறந்த இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அனைவரும் அன்பினை பகிர்ந்து இந்த நாளை குதூகலத்துடன் கொண்டாடுவோம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் என்பது மத பேதமின்றி அனைவருக்கும் ஒற்றுமையுடன் கொண்டாடும் பண்டிகை. இந்த ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    வரலாறு காணாத பெருமழையால் பெருந்துயரம் கண்ட மக்களின் வாழ்வியல் சூழல் மாறி, இயல்புநிலை திரும்பவும், மகிழ்ச்சி பெருகவும் இனிய கிறிஸ்துமஸ் தினத்தில் எல்லாம் வல்ல இயேசுகிறிஸ்து ஆசிர்வதிக்கட்டும். உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ்:-

    பிறரிடம் நாம் அன்பை எதிர்ப்பார்ப்பதுபோல் நாமும் பிறரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே இயேசு பிரானின் கட்டளை. இதன் அடிப்படை மகத்துவத்துவத்தை உணர்ந்து அனைத்து மத மக்களின் ஆதரவோடு பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் அனைவரிடத்தும் அன்பை போதிப்போம், ஆன்மீகத்தை உணர்த்துவோம்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    அனைவரிடமும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இந்த திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    இயேசுபிரான் போதித்த அன்பு, பாவ மன்னிப்பு போன்ற அகிம்சை கொள்கைகளை கடைபிடித்து சகோதரத்துவம், ஒற்றுமையுடன் வாழ்தல் போன்று உயரிய லட்சியங்களோடு நாம் அனைவரும் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். மனிதநேயம் தழைக்கவும், அன்பு, பாசம், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகள் வளரவும் நாம் அனைவரும் மனித உணர்வோடு ஒன்றுபட்டு வாழ இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-

    இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி புயல், பெருவெள்ளம், உடமையிழப்பு உயிரிழப்பு ஆகியவற்றைச் சந்திக்கும் அவலங்கள் மக்களுக்கு நேரிட்டன! உலக ரட்சகரும் தேவமைந்தனுமான இயேசு கிறிஸ்து பிறந்த நாளில், துயருற்ற மக்கள் யாவரும் துயர்நீங்கி, அமைதியும் ஆறுதலும் பெற்று இயல்பு வாழ்க்கை வாழ நாம் அனைவரும் அவரைத் துதித்து, இனி வரும் காலங்கள் இனிதாக அமைந்திட வேண்டி நிற்போம்! அனைவருக்கும் எனது அன்பு கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    இயேசுபிரான் இவ்வுலகில் தேவகுமாரனாக அவதரித்த திருநாள்தான் கிறிஸ்துமஸ் நன்நாள். இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன. உலகமெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துமஸ் திருநாள் உற்சாகத்தோடும் பக்தி பெருக்கோடும் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் நம்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் முத்தையா மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், நிலதரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.மார்டீன் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
    • கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும்.

    தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கபடி வீரர் அருணாச்சலம், குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
    • கபடி வீரர் அருணாச்சலம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் குரும்பலாபேரியை சேர்ந்த கபடி வீரர் அருணாச்சலம், குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரது குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    கபடி வீரர் அருணாச்சலம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தண்டனைகள் கடுமையாகும்போது தான் குற்றச்செயல்கள் குறையும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    சென்னை கிண்டியிலுள்ள தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை எதிர்க்கட்சிகள் பலமுறை சுட்டிக்காட்டியும் ஆளும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததின் விளைவாகதான் ஆளுனர் மாளிகை வாசலில் குண்டு வெடித்துள்ளது.

    இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான உண்மை குற்றவாளியையும் அதற்கு காரணமாக மூளையாக இருந்து செயல்பட்ட சமூக விரோதியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தண்டனைகள் கடுமையாகும் போது தான் குற்றச்செயல்கள் குறையும் என்பதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் சொத்துவரி 2 மடங்காக உயர்த்திய காரணத்தால் கடை வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
    • வணிக நிறுவனங்கள் கடைகளை மூடிவிட்டு வீதிகளில் இறங்கி போராடும் அசவுகரியமான சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறிய மற்றும் பெரிய அளவில் கடைகள் நடத்தி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை வதைக்கும் பொருட்டு அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்துள்ள கடைகளின் பெயர் பலகைக்கும் வரி விதிக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தினமும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் உழைத்து வாழக்கூடிய வியாபாரிகள் மீது தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் சொத்துவரி 2 மடங்காக உயர்த்திய காரணத்தால் கடை வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது. வாடகையைத்தொடர்ந்து 2 முறை மின்கட்டணத்தை உயர்த்திய அரசு, தற்போது கடை பெயர் பலகைகளுக்கும் வரி விதிக்க நினைப்பது கேலிக்கூத்தாகும். ஆதலால், வணிக நிறுவனங்கள் கடைகளை மூடிவிட்டு வீதிகளில் இறங்கி போராடும் அசவுகரியமான சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.

    வியாபாரிகளின் நலன் கருதியும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதியும் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைக்கு வரிவிதிக்கும் எண்ணத்தை தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் முழுமையாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.
    • தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இரு நிகழ்வுகளிலும் ஒரே வகையான கள்ளச்சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி வரும் ஆய்வுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு நடைமுறைப் பிரிவு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வரையிலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும்.

    கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர்.

    காரணைப் புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிர் இழந்த சம்பவம் துரதிஷ்டவசமானதாகும்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.

    தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை தொடங்க இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
    • தன் மீதுள்ள திடமான நம்பிக்கையாலும், அச்சம் தவிர்த்து, வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடும், எதிர்கால சிந்தனையோடும், நாமும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நாளை தொடங்க இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தன் மீதுள்ள திடமான நம்பிக்கையாலும், அச்சம் தவிர்த்து, வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடும், எதிர்கால சிந்தனையோடும், நாமும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்கிற லட்சியத்தோடும், உயர்ந்த கனவுகளோடும், தேர்வு மையத்திற்கு தவறாமல் வருகை தந்து தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

    சென்னை :

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள 3 லட்சம் போதுமானதல்ல, தொழிலாளர்களின் உயிர் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது என்பதை அரசு கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
    • இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கும் தமிழில் வெளிவந்த "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விருது கிடைத்துள்ளது. அதே நேரத்தில் "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற தமிழில் வெளியான குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் கலைத்திறன் உலக அளவில் உயர்ந்து நிற்பதை எண்ணி நாடே பெருமை கொள்கிறது. இந்த விருது கிடைப்பதற்காக கடுமையாக உழைத்த அத்துணை கலைத்துறையை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    • திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதத்தை பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளில் வைத்து கொடுத்து வருகிறார்கள்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூ, மாலைகள் வைக்கவும், பிரசாதங்கள் கொடுக்கவும் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதத்தை பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளில் வைத்து கொடுத்து வருகிறார்கள். இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூ, மாலைகள் வைக்கவும், பிரசாதங்கள் கொடுக்கவும் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்யும்போது தமிழகத்தில் உள்ள 10 லட்சம் பனைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படும். ஆண்டுதோறும் பனைத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள்.
    • காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்ட விளம்பரங்களில் பெருந்தலைவர் காமராஜர் படம் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயங்களில் மட்டும் காமராஜர் படத்தை சிறிய அளவில் பயன்படுத்தி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மற்ற நேரங்களில் அவரது படத்தையும், பெயரையும் மறைக்கிறார்கள்.

    காமராஜர் பெயரையும், புகழையும் மறைக்க நினைக்கும் காங்கிரஸ்காரர்களின் எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். எனவே காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருதுபாண்டிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு முழு உருவ சிலையும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபமும் மார்பளவு சிலையும் அமைத்து தியாகிகளை பெருமைப்படுத்தியதை வரவேற்கிறோம்.
    • தியாகி சங்கரலிங்கனாரின் தியாகங்களை போற்றும் வகையில் அவருக்கும் தமிழக அரசு முழு உருவ சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிண்டி காந்தி மண்டபம் அருகில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை போற்றும் வகையில் மருதுபாண்டிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு முழு உருவ சிலையும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபமும் மார்பளவு சிலையும் அமைத்து தியாகிகளை பெருமைப்படுத்தியதை வரவேற்கிறோம்.

    அதேநேரத்தில் தியாகி சங்கரலிங்கனாரின் தியாகங்களை போற்றும் வகையில் அவருக்கும் தமிழக அரசு முழு உருவ சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×