search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை என்.ஆர்.தனபாலன் வழங்கினார்
    X

    சென்னையில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை என்.ஆர்.தனபாலன் வழங்கினார்

    • சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண கூடத்தில் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் என்.ஆர்.தனபாலன் பங்கேற்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும், என்.ஆர்.டி. கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனருமான என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

    என்.ஆர்.தனபாலன் தனது பிறந்தநாளையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லறை தோட்டத்தில் உள்ள தாயாரின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இயங்கி வரும் அரிமா சங்கத்திற்கு சொந்தமான டயாலிசிஸ் சென்டரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான பழங்கள், காலை உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து அவர் தி.நகர் திருமலைப்பிள்ளை தெருவில் காமராஜர் நினைவு இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண கூடத்தில் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.தனபாலன் பங்கேற்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

    பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, தையல் எந்திரம், வேட்டி-சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை என்.ஆர்.தனபாலன் வழங்கினார்.

    விழாவில் ஏராளமானோர் பங்கேற்று என்.ஆர்.தனபாலனை வாழ்த்தினார்கள். அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி.சேகர், த.மா.கா. நிர்வாகி ஜி.ஆர்.வெங்கடேஷ், இந்திய நாடார்கள் பேரமைப்பு பொதுச்செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், நிர்வாகி அண்ணா தனபால், பொருளாளர் ஏ.எம்.டி.சிவக்குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்தர் தேவசகாயம், மாவட்ட செயலாளர் பெருமாள், ரத்தினம் ஹார்டுவேர்ஸ் என்.ஆர்.அந்தோணிதாஸ், தொழில் அதிபர் ஆவடி ஏ.முருகன் கிராமணியார், எஸ்.எம்.எண்டர்பிரைசஸ் கே.சத்தியமூர்த்தி, மனோபாக்யா டிரான்ஸ்போர்ட் எஸ்.பாக்யராஜ், ஸ்ரீ காமாட்சி அம்மன் பண்ட் கரு.வெள்ளைச்சாமி நாடார், பா.திருமலை நாடார், கரு.த.காமராஜ் நாடார், ஸ்ரீ பூர்ணிமா ஏஜென்சிஸ் என்.அஜித்குமார், ஆர்.முத்துகிருஷ்ணன்,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார், மாநில பொருளாளர் துறையூர் பி.பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் சந்தானம், மாவட்ட தலைவர் எம்.வைகுண்ட ராஜா, மாவட்ட செயலாளர் ஜெ.முத்து, மதுரவாயல் பகுதி தலைவர் டி.செல்டன், விருகை பகுதி தலைவர் கே.மணிராஜ், அம்பத்தூர் பகுதி தலைவர் எம்.சேர்மக்கனி, மகளிர் அணி துணைத்தலைவி சிவகங்கை விக்டோரியா, குமரி அன்பு கிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி காமராஜ், குலசை முத்து, கே.பி.நல்லதம்பி, வி.பி.ஐயர், பூவை.ஜெயக்குமார், நசரத்பேட்டை முருகேசன், திருமழிசை அய்யாத்துரை, ராஜாகனி,

    தமிழ்நாடு நாடார் பேரவை செயற்குழு உறுப்பினர் மதுரை பன்னீர்செல்வம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, சென்னை நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திக், அகில உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க துணைத்தலைவர் பவர் பாண்டியன், செயலாளர் முருககனி, நடிகர்கள் விஜய் பாரத், கரிகாலன், விஜித், இயக்குனர்கள் அருள் செல்வன், பகவதி பாலா, தயாரிப்பாளர் பூபால் அழகன், கேமராமேன் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

    பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை என்.ஆர்.டி. குழும இயக்குனர் ஆர்.சம்பத் தலைமையில், என்.ஆர்.டி. அறக்கட்டளை நிர்வாகிகள் என்.ஆர்.டி. பிரேம்குமார், என்.ஆர்.டி. பிர்லா டேவிட், என்.ஆர்.டி.சேசுராஜ், ஜெ.பிரவீன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×