search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peace march"

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.
    • மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர்.

    ஏற்காடு:

    மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.

    இந்த பேரணி ஏற்காடு காந்தி பூங்காவில் தொடங்கி டவுன் மார்க்கெட், பஸ் நிலையம் வழியாகச் சென்று ஒண்டிக்கடை ரவுண்டானா அருகில் உள்ள புறக்காவல் நிலையம் அருகில் நிறை வடைந்தது. அதனைத் தொடர்ந்து ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரணி குறித்தும் பேரணி எதற்காக நடைபெற்றது என்று குறித்தும் விளக்கி பேசினர்.

    மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர். இந்த பேரணியில் ஏற்காட்டில் உள்ள பள்ளி குழந்தைகள், கிறிஸ்தவ சபையை சேர்ந்த தலை வர்கள், இஸ்லாமிய தலை வர்கள், இந்து மத முக்கி யஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களும் கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு நாளையொட்டி நடந்தது
    • 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் க.தேவராஜ் எம்எல்ஏ அமைதி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் எம்எல்ஏக்கள் நல்லதம்பி வில்வநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம் கே ஆர் சூர்யகுமார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா, ஒன்றிய குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமுருகன், சத்யா சதீஷ்குமார், உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமாேனா கலந்து கொண்டனர்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.



    இந்நிலையில் இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைகிறது. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இது தவிர ஏராளமான மக்களும் திரண்டுள்ளதால் மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
    பெருந்தலைவர் காமராஜரின் 44-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு என்ஆர் தனபாலன் தலைமையில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் 44-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை (செவ்வாய்) கிண்டியில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடக்கிறது.

    காமராஜர் மீது பற்று கொண்ட தொண்டர்கள், விசுவாசிகள், காமராஜர் காட்டிய நல்வழியில் வாழும் பொதுமக்கள், சமுதாய சொந்தங்கள் என அனைவரும் எனது தலைமையில் நடைபெறும் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். #tamilnews
    ×