search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysteries"

    • கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே அலியாபாத், காட்டு எடையார் பாளையம் மற்றும் காட்டுசெல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர். இது குறித்து ஜி.அரியூர் மின்வாரிய இளமின்பொறியாளர் கிருபாகரன் ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்தது தெரியவந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டை கிராமத்தில் உமா மகேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சிவாச்சாரியார் பூஜை செய்து விட்டு பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறு நாள் காலையில் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாலா திரு–விடை–மருதூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
    • வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது.

    விழுப்புரம்::

    விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 50) கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச்செனறார்   நள்ளிரவு சமயத்தில் வீட்டின் முன்னால் இருந்து புகை மண்டலமாக வந்தது. திடுக்கிட்டு எழுந்த வேலு வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். மேலும் இது குறித்து வேலு கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சம்பவ இடத்திற்கு சென்றுஸ்கூட்டர் எப்படி எரிந்தது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே கோவிலில் நகை-பணம் திருடு போனது.
    • இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலை பூசாரி வழக்கம்போல் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது கோவில் அலுவலக அறையும் திறந்து கிடந்தது.

    அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த அம்ம னுக்கு அணிவிக்கப்படும் 6கிராம் தங்கத்தாலி, 10 கிராம் வெள்ளி கண்மலர் ஆகியவை திருட்டு போயி ருந்தது. மேலும் கோவிலில் இருந்த சிறிய உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணமும் திருடப்பட்டிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அவ்வழியாக சென்றவர்கள் அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை ேபானது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பலம் அருகே அரசுக்கு சொந்த மான டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையில் பணி புரியும் ஊழியர்கள் நேற்று இரவு விற்பனை நேரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதையும், அதன் அருகே அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைசேர்ந்தவர் செல்வம் (வயது 47).விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு அருகே இருக்கும் ஏப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக ஊருக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீேராவை திறந்து அதில் இருந்த பணம்- நகையை கொள்ளையடித்து சென்றனர். மாலை நேரம் செல்வம் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடைந்துஉள்ளே சென்று பார்த்தபோது பீேராவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்துஒலக்கூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல பாதிரி கிராமத்தை சேர்ந்த காளி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை,5000 ரூபாய் பணம்,ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.மேலும் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் 250 கிராம் கிலோவெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது. இதுதவிர நீலகண்டன் என்பவரது வீட்டிலும்கொள்ளையர்கள் 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். தேபோ மேலும் பாங்களத்தூர் பாதிரி,போன்ற பல்வேறு இடங்களில் பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்து உள்ளனர்.அங்கு எந்த பொருளும்இல்லாததால் அங்கிருந்து சென்றுள்ளனர். திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கம்பிகளை, மர்பநபர்கள் திருடி சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிராவில் கம்பியை திருடி சென்ற காட்சி பதிவாகியது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சை குடந்தைதேசிய நெடு ஞ்சாலை திருப்பாலை த்துறையில் தவீடுகள் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும்கடையை முகமது நிசார் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

    காலையில் கடையை திறக்க வரும்போது, முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே கடையின் உள்ளே சென்று பார்த்த போது, வீடு கட்டுவதற்காக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 7 டன்னுக்கு மேல் எடை உள்ள 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்பிகளை, மர்பநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது லாரியை கடைக்கு உள்ளே கொண்டு வந்து கம்பியை திருடி சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் முகமது நிசார் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார்.
    • இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே குமராபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிர்புறத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை உள்ளது. இங்கு குமராபுரம் சேர்ந்த முருகையன் (வயது 59) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லிக்கு ப்பம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முருகையனை சிகிச்சை க்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் முருகேசன் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிருக்கு மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இந்த நிலையில் பழைய இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் யாராவது திருடவந்த போது காவலர் முருகையன் தடுத்த போதுஅங்கிருந்த மண்வெட்டியால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்கு வெட்டினா ர்களா? என்பதனை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் ஆஞ்சநேயர் கோவில், அம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும், மேலும் பழைய இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பி டத்தக்கதாகும்.

    இதனை தொடர்ந்து பழைய இரும்பு பொருள் வாங்கும் கடைக்கு காவலராக முருகையன் இருந்த நிலையில் மர்ம நபர்கள் கொலைவெறியுடன் தலையில் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடலூர் , நெல்லிக்குப்பம் பகுதிகளில் பெண்களிடமிருந்து செயின் பறிப்பு மற்றும் கடைக்கு காவலராக பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது. 

    • வீரசோழன் ஆற்றங்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடை உள்ளது.
    • மர்ம நபர்கள் மது பாட்டில்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீழ தூண்டில் விநாயகம் பேட்டை டாஸ்மாக் கடை பூட்டு உடைத்து திருட்டு நடந்துள்ளது.

    இது தொடர்பாக கடை மேற்பார்வையாளர் பழனிவேல் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்று கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இக்கடை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கதவு மற்றும் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, மது பாட்டில்களையும் விற்பனையான பணத்தையும் எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர்.
    • கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியங் கொண்டான் நகரை சேர்ந்தவர் ஜான். இவர் திண்டிவனம் காந்திசிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இதேபோல அந்த பகுதியில் ஆனந்த் என்பவர் செல்போன் சர்வீஸ் சென்டரும் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் மையத்தின் பூட்டுகளை உடைத்தனர். இதேபோல செல்போன் சர்வீஸ் மையம், அருகில் உள்ள பேன்சிஸ்டோர் ஆகி யவற்றின் பூட்டுகளையும் உடைத்தனர்.

    அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை ஜான் உள்பட 3 பேரும் கடைகளை திறக்க வந்தனர். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. ேபாலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • கடலூர் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் திருடப்பட்டது.
    • மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு சேர்ந்தவர் உமா (வயது 55). இவர் நேற்று கடலூர் திருப்பா திரிப்புலியூரில் உள்ள நகைக்கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வத ற்காக பஸ்நிலையத்திற்கு சென்றார். அப்போது உமா தனது கைப்பையில் 41 ஆயிரம் ரூபாய் வைத்திருந்து பஸ்க்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது ஊருக்கு செல்வ தற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது தான் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்த உமா உடனடியாகதான் நின்றிருந்தஇடத்தில் சென்று பார்த்தபோது கைப்பை காணவில்லை. மேலும் மர்ம நபர்கள் கைப்பையை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் உமா கொடுத்த புகாரின் பேரில் கைப்பையில் இருந்த 41 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையத்தில் பட்ட ப்பகலில் பெண், தனது கைப்பையில் வைத்திருந்த 41 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது

    • பண்ருட்டியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு மதுரா துண்டு காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசு, விவசாயி. இவர் தினமும் காலை வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு செல்வது வழக்கம். வழக்கம்போல அவர் வீட்டை பூட்டிக்கொண்டு வயலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராசு வீட்டினுள் நுழைந்து டேபிளில் உள்ள பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.15,000 திருடி சென்றனர்.

    ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு மாலை வீடு திரும்பிய விவசாயி ராசு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×