search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
    X

    கோவில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது.

    கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    • கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்தது தெரியவந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டை கிராமத்தில் உமா மகேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சிவாச்சாரியார் பூஜை செய்து விட்டு பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறு நாள் காலையில் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாலா திரு–விடை–மருதூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    Next Story
    ×