search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் அபேஸ்
    X

    கடலூர் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் அபேஸ்

    • கடலூர் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் திருடப்பட்டது.
    • மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு சேர்ந்தவர் உமா (வயது 55). இவர் நேற்று கடலூர் திருப்பா திரிப்புலியூரில் உள்ள நகைக்கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வத ற்காக பஸ்நிலையத்திற்கு சென்றார். அப்போது உமா தனது கைப்பையில் 41 ஆயிரம் ரூபாய் வைத்திருந்து பஸ்க்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது ஊருக்கு செல்வ தற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது தான் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்த உமா உடனடியாகதான் நின்றிருந்தஇடத்தில் சென்று பார்த்தபோது கைப்பை காணவில்லை. மேலும் மர்ம நபர்கள் கைப்பையை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் உமா கொடுத்த புகாரின் பேரில் கைப்பையில் இருந்த 41 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையத்தில் பட்ட ப்பகலில் பெண், தனது கைப்பையில் வைத்திருந்த 41 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது

    Next Story
    ×