என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த கோவிலையும், அலுவலக பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும் படத்தில் காணலாம்.
கோவிலில் நகை-பணம் திருட்டு
- திருமங்கலம் அருகே கோவிலில் நகை-பணம் திருடு போனது.
- இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலை பூசாரி வழக்கம்போல் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது கோவில் அலுவலக அறையும் திறந்து கிடந்தது.
அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த அம்ம னுக்கு அணிவிக்கப்படும் 6கிராம் தங்கத்தாலி, 10 கிராம் வெள்ளி கண்மலர் ஆகியவை திருட்டு போயி ருந்தது. மேலும் கோவிலில் இருந்த சிறிய உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணமும் திருடப்பட்டிருந்தது.
யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






