search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Indians"

    • மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார்.
    • ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 9 ரன்னிலும் ரோகித் 4, நமன் 0 என விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சூர்யகுமார் யாதவ் 102 ரன்னிலும் திலக் வர்மா 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 எடுத்து வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. மோசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    அதிரடியாக விளையாடிய டிராவிஸ் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    • ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடும்.

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள்
    • மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.

    மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா?

    குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது தங்களுடைய பேட்டிங் வரிசை ஏன் மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • லக்னோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?. லீக் சுற்றோடு வெளியேறுவது யார்? போன்ற முடிவுகள் ஏறக்குறைய தெரிந்து வருகிறது.

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியது உள்ளது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மொத்தம் அறு வெற்றிகள் ஆகும்.

    ராஜஸ்தான் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது. கொல்கத்தா 10-ல் 7-ல் வெற்றி பெற்றுள்ளது.

    எல்எஸ்ஜி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 வெற்றிகள் பெற்றுள்ளன. இந்த அணி இன்னும் 4 போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும். தற்போது ஏறக்குறைய பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

    ஆர்சிபி 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தால் மும்பையை போன்று ஏறக்குறைய பிளுஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.

    • மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் வருண்சக்கரவர்த்தி, சுனில் நரேன், ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் 5 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.

    பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் - மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

    19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இஷான் கிஷன் 13, ரோகித் 11, நமன் 11, திலக் வர்மா 4, வதேரா 6, பாண்ட்யா 1 என பெவிலியன் திரும்பினர்.

    ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசினார். இவரும் டிம் டேவிட்டும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். இதனால் மும்பை அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. அந்த வேளையில் 56 ரன்கள் எடுத்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகி வெளியேறினார். டிம் டேவிட்டும் 24 ரன்னில் வெளியேற மும்பை அணியின் தோல்வி பிரகாசமானது.

    இதனால் மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் வருண்சக்கரவர்த்தி, சுனில் நரேன், ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • கொல்கத்தா அணி தரப்பில் வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் 5, சுனில் நரேன் 8 என வெளியேறினர். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 13, ஷ்ரேயாஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த மனிஸ் பாண்டே ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்தது.

    பொறுப்புடன் ஆடிய மனிஷ் பாண்டே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸல் 7 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதிவரை அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை டாஸ் வென்றது.
    • மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்டவில்லை.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் மும்பை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் டாஸ் போடுவதில் மீண்டும் மும்பை அணியால் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் ஏமாற்று வேலை செய்ததாக முன்பே ஒரு முறை சர்ச்சை எழுந்தது.

    அதனையடுத்து ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என டாஸ் போட்ட பின் கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

    அந்த வகையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காசை சுண்டினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஹெட்ஸ் என கேட்டார். ஆனால் மேட்ச் ரெப்ரீ கீழே விழுந்த காசை உடனடியாக கையில் எடுத்ததோடு, ஹர்திக் பாண்டியா டாசில் வென்றதாக அறிவித்தார்.

    மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்ட வில்லை. இதை அடுத்து சமூக வலை தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாசில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்று விட்டதாக கூறி வருகிறார்கள்.

    ஒருவேளை உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் வென்றிருக்கலாம். ஆனால், மேட்ச் ரெப்ரீ அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்து விட்டார் என சில ரசிகர்கள் குறிப்பிட்டு மேட்ச் ரெப்ரீ தவறு செய்து விட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.

    • இன்றைய ஆட்டத்தில் தோற்றால் மும்பை அணி முதல் அணியாக வெளியேறும்.
    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பையை கொல்கத்தா அணி வென்றதில்லை.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இனிவரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு தனக்கு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டிலும் திடமாக இருந்தால் ஒருவேளை அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கலாம். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி முதல் அணியாக வெளியேறும்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    வான்கடே மைதானத்தை பொறுத்தமட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணி பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இங்கு 10 ஆட்டங்களில் மும்பையுடன் மோதி இருக்கும் கொல்கத்தா அணி 9-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பையை வீழ்த்த முடியாமல் தவிக்கும் கொல்கத்தா அணி அந்த நிலையை மாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திப் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஜேக் பிரேசர்-மெக்கர்க், 2. குமார் குஷாக்ரா, 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ஸ்டப்ஸ், 6. அபிஷேக் பொரேல், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. லிசாட் வில்லியம்ஸ், 10. முகுஷ் குமார், 11. கலீல் அகமது.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- ரிசிக் தர் சலாம், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ரிக்கி புய், சுமித் குமார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3. திலக் வர்மா, 4. நேஹால் வதேரா, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. டிம் டேவிட், 7. முகமது நபி, 8. பியூஷ் சாவ்லா, 9. லுக் வுட், 10. பும்ரா, 11. நுவான் துஷாரா.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷாம்ஸ் முலானி, தெவால்ட் பிரேவிஸ், குமார் கார்த்திகேயா

    • ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி, மும்மை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். தொடர்ந்து, நேஹல் வதேரா 49 ரன்களும், முகமது நபி 23 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 6 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவித் 3 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனால், 180 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் இறங்குகிறது.

    ×