search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missing"

    • திருச்சி பொன்மலைபட்டியில் நடன மாணவி மாயம்
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்

    திருச்சி,

    திருச்சி பொன்மலைப்பட்டி திரு.வி.க தெரு சி.வி.டி.ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹரிணி. இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சி பெற்று வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் உமா மகேஸ்வரி பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

    • லெனின்சிங் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மாயநேரியை சேர்ந்தவர் லெனின்சிங் (வயது 32). தொழிலாளி. கடந்த 17-ந் தேதி இவர் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான லெனின்சிங்கை தேடி வருகின்றனர்.

    • மாயமான 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாகமங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி போலீஸ் சரகத்துக் குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றும் கட்டிட வேலை பார்ப்பதுண்டு.

    அதன்படி சில மாதங்க ளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள நாகமங்கலத்துக்கு கட்டிட வேலைக்கு பாலகிருஷ்ணன் சென்றார். அப்போது இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் கோகுலுக்கும் (16) பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாகமங்க லத்தில் வேலை முடிந்த பின்பு பாலகிருஷ்ணன் ஊர் திரும்பி உள்ளார். அவருடன் கோகுலும் நரிக்குடிக்கு வந்தார். சில மாதங்கள் அங்கு தங்கியபோது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹபீஸ் (16), பிலாவடி குமார் மகன் அபிலேஷ் கார்த்திக் (14), ராஜபாண்டி மகன் அருண்பாண்டி (13)ஆகியோருடன் கோகுலுக்கு நட்பு ஏற்பட்டது. 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த னர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 4 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து பாலகிருஷ் ணன் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரும் எங்கு சென்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாக மங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவன் மாயம்

     திருச்சி

     திருச்சி மாவட்டம் மணப்பாறை உசிலம்பட்டி தவிட்டுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஜீவானந்தம் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி., ஐ.டி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர.

    நண்பர்களிடமும் விசாரித்தனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து சண்முகம் மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதில் மாயமான தனது மகனை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி மாயமானார்
    • போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் வள்ளி(வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வள்ளியின் தாய் சங்கீதா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசி வந்ததாக தகவல்
    • மனைவியை மீட்டு தரும்படி கணவர் போலீசில் புகார்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளம்பெண் யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தார். இது அவரது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவர் இளம்பெண்ணின் தாயிடம் கூறினார். அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அவரது கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் அக்கம் பக்கத்தினரிடம் தான் ஏற்கனவே வேலை செய்த மில்லுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் திருமணமான 6 மாதத்தில் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்

    • அரியலூரில் வீட்டை விட்டு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
    • விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டி திருக்கோணம் காங் கேயம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது47). விவசாயி. இவரது மகள் தேன்மொழி (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.கடந்த 15-ந் தேதி தேன்மொழியின் தாத்தா-பாட்டி ஆகியோர் வீட்டு வேலை செய்யவில்லை என திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த தேன்மொழி வீட்டை விட்டு சென்று ள்ளார்.ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படு கிறது. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்கிரம ங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தேன்மொழியை வலைவீசி தேடி வருகிறார்.

    • தவுட்டுப்பாளையம் நர்சிங் கல்லூரி மாணவி மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி கல்யாணி (35). இவர்களது மகள் ஹர்சினி(17). இவர் புன்னம் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக ஹர்சினி வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் ஹர்சினி வீடு திரும்பவில்லை.

    பெற்றோர்கள் கல்லூரிக்குச் சென்று விசாரித்த போது ஹர்சினி கல்லூரிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். பல இடங்களிலும் தேடி கிடைக்காததால், இது குறித்து வர்சினியின் தாய் கல்யாணி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருச்சி உறையூரில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் பெண் மாயமாகி உள்ளார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரது மனைவி கண்ணகி வயது 47 இவர் திருச்சியில் உள்ள ஹோட்டலில் சமையல் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கண்ணகிக்கு அழகு முருகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது கண்ணகியின் மகன் வினோத் அதிர்ச்சி அடைந்தார் பின்னர் தாயை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் வீட்டிலிருந்து வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற கண்ணகி மாயமானார் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை இதுகுறித்து கண்ணகியின் மூத்த மகன் விமல் உறையூர் போலீஸ் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சுருளையை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் சுதா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ள சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த சுதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை வேலாயுதம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுதாவை தேடி வருகின்றனர்.

    • திருச்சியில் வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் உள்பட 5 பேர் மாயமாகி உள்ளனர்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி செப் 13 -

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி யை சேர்ந்தவர் செல்ல க்குட்டி ( வயது 79). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவி ல்லை. இதுகுறித்து அவரது மகன் சத்திய செல்வன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் எடமலைப் பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த காளிதாஸ் (வயது 75) என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறி த்து அவரது மகன் முத்து ச்செல்வம் கொடுத்த புகா ரின் அடிப்படையில் எடம லை ப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு தங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு லெனின் (5), ஜஸ்வின் (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து குமார் பொன் மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடைக்கு சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் மகள் பவித்ரா(25). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், அதனை சரிசெய்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் ஜோதி கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×