search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Love marriage"

    • போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    அருண் சக்ரவர்த்திக்கு வடக்கிப்பாளையம் அருகே உள்ள கொங்கநாட்டன்புதூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.

    காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் கடந்த 1-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஆச்சிப்பட்டியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். திடீரென மாயமானதால் அவர்களின் பெற்றோர் மாயமானவர்களை கண்டுபிடித்து தரும்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது வீணாக வாழ்க்கையை தொலைத்து விடாதே, எங்களுடன் வந்து விடு என ஆலோசனை வழங்கினர். அவர்களின் பேச்சை கேட்ட இளம்பெண் அருண் சக்ரவர்த்தி கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    திருமணம் செய்த காதலி தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றதால் மனவேதனை அடைந்த அருண் சக்ரவர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக அருண் சக்ரவர்த்தியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அலங்காரபாபு ஓவியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மன வருத்தத்தில் இருந்த அலங்கார பாபு தற்கொலை செய்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சிலுவைபட்டி ராம்தாஸ்நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் அலங்காரபாபு (வயது 28) மீனவர். கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு ஓவியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஓவியா 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அலங்கார பாபு வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதேப்போல காமராஜ்நகர் மேற்கு பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பெரியசாமி (23) தனது வீட்டு மாடியில் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றவர். காலை வெகுநேரமாகியும் எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்க்கும் போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இது குறித்து தாள முத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தட்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    • பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் மெக்கானிக்காக பணி செய்து வந்தார்.
    • நான் கடலூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி சென்று விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இங்கு பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் (31) மெக்கானிக்காக பணி செய்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெளியில் சென்று பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 22-ந்தேதி விழுப்புரம் மார்க்கெட்டு பின்புறம் அழைத்து சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டினார்.

    அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பண்ருட்டி எல்.என். புரம் மின்வாரிய அலுவலகம் அருகில் இறக்கி விட்டு விட்டு உன்னுடன் வாழ எனக்கு விருப்பமில்லை நான் கடலூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி சென்று விட்டார் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ருட்டி மகளிர் போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    • புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார்.
    • மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி, கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் புருஷோத்தமன். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரான இவர் சீனாவில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த மிங்மிங் என்று இளம்பெண் கேஷியராக வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் புருஷோத்தமன், மிங்மிங் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவர்களது பெற்றோர்களிடம் கூறினர்.

    அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் சீனாவில் இருந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மணமகள் நகரிக்கு வந்தார்.

    அவர்களுக்கு மணமகன் வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

    இந்து முறைப்படி மணமகள் திருமண முகூர்த்த புடவையும், மணமகன் வேட்டி சட்டை அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.

    பின்னர் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்தி சென்றனர்.

    • உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    • வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி கமிட்டியார்காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 23) .இவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் ரஞ்சினியின் தாய்மாமா கிருஷ்ணசாமி மற்றும் தினேஷ்,கோபி ஆகியோர் மதன்குமாரின் அண்ணன் நரேந்திரன் வீட்டுக்கு சென்று உன் தம்பி எப்படிடா எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்துள்ளனர். இதில் நரேந்திரன் காயம் அடைந்தார்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த நரேந்திரன் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    • சுபாஷ், அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அவர்கள் கடந்த 27-ம் தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (50), விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சுபாஷ் (26) என்ற மகனும் உள்ளனர்.

    சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கடந்த 27-ம் தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சுபாஷ் தனது மனைவி அனுசுயாவை அழைத்துக் கொண்டு நேற்று சொந்த ஊரான அருணபதிக்கு வந்தார். அப்போது புதுமண தம்பதியான சுபாஷ்-அனுசுயா இருவரும் தண்டபாணி வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

    தனது எதிர்ப்பை மீறி மகன் காதல் திருமணம் செய்துகொண்டதால் விரக்தி அடைந்த தண்டபாணி 2 பேரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

    இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்தார். தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    கோபத்தில் இருந்த தண்டபாணி தனது தாய் கண்ணம்மா வீட்டிற்குச் சென்று என் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட அவர்களை வெளியே அனுப்பாமல் என்னை மேலும் அவமானப்படுத்தும் விதமாக வீட்டிற்குள் எப்படி அனுமதித்தாய்? என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷையும், கண்ணம்மாவையும் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த மருமகள் அனுசுயாவையும் அவர் சரமாரியாக வெட்டினார். இதனால் 3 பேரும் வலியால் பயங்கரமாக அலறினர். சிறிது நேரத்தில் சுபாஷூம், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா எட்வின் சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். மேலும் ஆணவ கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள தண்டபாணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், இரட்டை ஆணவக்கொலை செய்து தலைமறைவாக இருந்த தண்டபாணியை அரூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • சுபாஷ்-அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு வந்ததால் அவர்கள் கடந்த 27-ந்தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50), விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சுபாஷ் (26) என்ற மகனும் உள்ளனர்.

    சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சுபாஷ்-அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு வந்ததால் அவர்கள் கடந்த 27-ந்தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து சுபாஷ் தனது மனைவி அனுசுயாவை அழைத்து கொண்டு நேற்று சொந்த ஊரான அருணபதிக்கு வந்தார். அப்போது புதுமண தம்பதியான சுபாஷ்-அனுசுயா இருவரும் தண்டபாணி வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

    தனது எதிர்ப்பை மீறி தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனம் தாங்காமல் விரக்தியடைந்த தண்டபாணி 2 பேரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

    இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார்.

    தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    அப்போது கோபத்தில் இருந்த தண்டபாணி தனது தாய் கண்ணம்மா வீட்டிற்கு சென்று என் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட அவர்களை வெளியே அனுப்பாமல் என்னை மேலும் அவமானப்படுத்தும் விதமாக வீட்டிற்குள் எப்படி அனுமதித்தாய்? என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷையும், கண்ணம்மாவையும் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த மருமகள் அனுசுயாவையும் அவர் சரமாரியாக வெட்டினார். இதனால் 3 பேரும் வலியால் பயங்கரமாக அலறினர்.

    சிறிது நேரத்தில் சுபாஷூம், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா எட்வின் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் ஆணவ கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

    தலைமறைவாக உள்ள தண்டபாணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த மகனையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாட்டியையும் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹசரங்காவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • பாகிஸ்தான் லீக் தொடரில் இலங்கை அணியில் பணிச்சுமை காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் வீரர் வனிந்து ஹசரங்கா இடம்பெறவில்லை.

    ஹசரங்காவும் விந்தியா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.


    ஹசரங்காவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    முன்னதாக, பாகிஸ்தான் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தமான ஹசரங்கா, இலங்கை அணியில் பணிச்சுமை காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.     

    • சுகன்யாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆலங்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடசேரிரோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்சேகர் மகன் ரோஷ்னேஷ் (வயது 24). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை ஊராட்சி கொண்டையன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகன்யா (24). பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ள இவரும் ரோஷ்னேசும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இதற்கிடையே சுகன்யாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி முடிவெடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டது. ஆனாலும் சுகன்யாவின் பெற்றோர் காதல் கணவரிடம் இருந்து பிரித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் ரோஷ்னேஷ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தானும், சுகன்யாவும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் சுகன்யாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சுகன்யாவின் பெற்றோர் எங்களுக்கு மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆலங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பெற்றோர் திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண் ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகளுக்கும், அதே ஊரை ஒரு வாலிபருக்கும் இடையே காதல் உருவானது. ஆனால், 2 பேருக்கும் வயது இல்லாததால் இவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி, கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறை வாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊர் நல அலுவலர் தனபாக்கியம் சிறுமி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்: அதில் வயது சான்றுடன் சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்று விட்டார். இந்நிலையில் சிறுமியின் தந்தை ஏழுமலை நேற்று திடீரென முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    • காதலர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்செய்து கொண்டனர்.
    • 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

    திருப்பூர்:

    ஊட்டியை சேர்ந்தவர் சுஜித்குமார். இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது திருப்பூர் சூசையாபுரத்தை சேர்ந்த சுஜிதா(19) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகி வந்தனர்.

    பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவாகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து காதலர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்செய்து கொண்டனர்.

    தொடர்ந்து இருவரும் பிச்சம்பாளையம்புதூர் ஸ்ரீ நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணமான 4 மாதத்தில் திருமண தம்பதிகள் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும் சுஜித் குமார் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சுஜிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

    புளியங்குடியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகேசன். இவரும், அதே பகுதியை சேர்ந்த கற்பகசெல்வி(33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  கற்பக செல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் கடன் வாங்கியதாகவும், அதனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதனை அடைப்பதற்கு மனைவியின் நகைகளை அடகு வைத்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

     இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×