search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் திருமணம் செய்த 2-வது நாளில் தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் சென்ற இளம்பெண்
    X

    காதல் திருமணம் செய்த 2-வது நாளில் தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் சென்ற இளம்பெண்

    • போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    அருண் சக்ரவர்த்திக்கு வடக்கிப்பாளையம் அருகே உள்ள கொங்கநாட்டன்புதூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.

    காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் கடந்த 1-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஆச்சிப்பட்டியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். திடீரென மாயமானதால் அவர்களின் பெற்றோர் மாயமானவர்களை கண்டுபிடித்து தரும்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது வீணாக வாழ்க்கையை தொலைத்து விடாதே, எங்களுடன் வந்து விடு என ஆலோசனை வழங்கினர். அவர்களின் பேச்சை கேட்ட இளம்பெண் அருண் சக்ரவர்த்தி கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    திருமணம் செய்த காதலி தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றதால் மனவேதனை அடைந்த அருண் சக்ரவர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக அருண் சக்ரவர்த்தியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×