search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulambu"

    • எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்.
    • இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    கத்திரிக்காய் - 1/4 கிலோ

    சின்ன வெங்காயம் - 10

    நல்லெண்ணெய் - 150 மில்லி

    சீரகம் - சிறிது

    வறுக்க

    வெந்தயம் - 1/2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    கடுகு - 1 ஸ்பூன்

    மிளகு - 1/4 ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 15

    தனியா - 1/4 கப்

    வேர்கடலை - 4 ஸ்பூன்

    எள் - 2 ஸ்பூன்

    வறுத்ததுடன் சேர்த்து அரைக்க :

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தோலுடன் பூண்டு - 1

    கருவேப்பிலை - 1 கைப்பிடி

    புளி - நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்)

    செய்முறை

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு தனி தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    பின்னர் அதனுடன் வறுத்ததுடன் சேர்த்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

    கத்திரிக்காயை நான்காக கீறி அதில் இந்த மசாலாவை ஸ்டஃப் செய்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.

    கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் கொதிக்கவிடவும்.

    எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

    சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

    • ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று பருப்பு உருண்டை சேர்த்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பருப்பு உருண்டை செய்ய

    ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்

    காய்ந்த மிளகாய் - 5

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    ரசம் வைக்க :

    நெய் - 3 டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

    புளி தண்ணீர் - 1 கப்

    தக்காளி - 1

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    சீரகப் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும். அதோடு மஞ்சள், தனியா, சீரகம் , மிளகு தூள், உப்பு, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

    ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.

    சூப்பரான பருப்பு உருண்டை ரசம் ரெடி.

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • சிக்கனில் செய்யும் ரெசிபியில் ஒன்று தான் சிக்கன் சால்னா.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    தக்காளி - 2

    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    வறுத்து அரைப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 இன்ச்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் - 5

    கிராம்பு - 5

    தேங்காய் - 1 கப் (துருவியது)

    கசகசா - 3 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

    பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.

    பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி!!!

    • மிளகை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.
    • மிளகை தினந்தோறும் உண்பதால் ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும்.

    தேவையான பொருட்கள் :

    தனியா - 1 டேபிள்ஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    சீரகம், கடலைப் பருப்பு - சிறிதளவு

    காய்ந்த மிளகாய் - 3

    கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    வெந்தயம் - சிறிதளவு

    நல்லெண்ணெய் - தேவைக்கு

    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.

    தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் மிக்சியில் கொட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் அரைத்து வைத்துள்ள பொருட்களை போட்டு வதக்கவும்.

    அதனுடன் புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு கொதிக்க தொடங்கி எண்ணெய் பிரிந்து வந்தபிறகு இறக்கி பரிமாறலாம்.

    • கேரளாவில் இறால் மொய்லி மிகவும் பிரபலமான உணவு.
    • இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    இறால் - அரை கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி -1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    பூண்டு - 4 பல்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தேங்காய் பால் - 2 கப் (முதல் பால்)

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு/வினிகர் - 1 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - கால் கப்

    செய்முறை

    இறாலை நன்கு சுத்தம் செய்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

    இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் இறால் மற்றும் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

    நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து ஒரு நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றவும்.

    பின்பு தேங்காய் பாலைச் சேர்க்கவும்.

    நுரைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

    சுவையான இறால் மொய்லி தயார்.

    இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    • சிலருக்கு பரோட்டா விருப்ப உணவாக இருக்க சால்னா முக்கிய காரணமாக இருக்கும்.
    • இன்று ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் எலும்பு கறி - கால் கிலோ

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1/2 டிஸ்பூன்டீஸ்பூன்

    தேங்காய் துருவல் - 1 கப்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    மிளகு - 1/4 டீஸ்பூன்

    கல்பாசி பூ - 2

    ஏலக்காய் - 2

    பட்டை, லவங்கம் - சிறிது

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    மட்டன் எலும்பு கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி பூ, ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மட்டன் எலும்பு கறியை போட்டு அதனுடன் தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி 8 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி.

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள குருமா சூப்பராக இருக்கும்.
    • இன்று வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 1

    பொட்டு கடலை - 3 ஸ்பூன்

    தேங்காய் - கால் மூடி

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 7

    கிராம்பு - 3

    பட்டை சிறிய துண்டு - 1

    சோம்பு - 1 ஸ்பூன்

    கல்பாசி - அரை ஸ்பூன்,

    முந்திரி - 4

    எண்ணெய் - 5 ஸ்பூன்

    உப்பு - ஒன்றரை ஸ்பூன்

    கொத்தமல்லி தழை - ஒரு கொத்து.

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

    காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

    சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

    • காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
    • காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது.

    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

    தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு :

    வர மிளகாய் - 4

    தனியா - 1 தேக்கரண்டி

    மிளகு - 1/2 தேக்கரண்டி

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி

    துருவிய தேங்காய் - 1 கைப்பிடி

    கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )

    தாளிப்பதற்க்கு :

    எண்ணெய் - தேவையான அளவு

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1/2 அளவு

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 1

    சோம்பு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பில்லை - 2 கொத்து

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.

    * சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.

    * காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.

    * குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

    * காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.

    * இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.

    குறிப்பு : இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.

    • வெஜிடபிள் சால்னா பரோட்டா, தோசை, இட்லி, பூரி, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள சுவையாக இருக்கும்.
    • இதில் நாம் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 4

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    மல்லித் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

    தேங்காய் துருவல் - கால் கப்

    பிரியாணி இலை - 2

    பட்டை - 2

    ஏலக்காய் - 3

    கிராம்பு - 4

    சோம்பு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    பீன்ஸ் - 12

    கேரட் - 2

    பட்டாணி - ஒரு கப்

    உருளைக்கிழங்கு - 1

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

    அத்துடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கூடவே, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசமனை போகும் வரை வதக்கி இறக்கி ஆறவிடவும்.

    இதனை, மிக்ஸி ஜாரில் போட்டு, கூடனே தேங்காய்த் துருவல் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

    இப்போது, குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, அரைத்து வைத்த மசாலா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து, மூடிப் போட்டு 3 விசில்விட்டு வேக வைக்கவும்.

    காய்கள் வெந்த நிலையில், இறுதியாக கொத்தமல்லித் தூவி இறக்கினால் அட்டகாசமான சால்னா ரெடி..!.

    • தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.
    • தக்காளி குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தக்காளி - 3

    வெங்காயம் - 1

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1/4 கப்

    சோம்பு - 3/4 டீஸ்பூன்

    இஞ்சி - 1/4 இன்ச்

    பச்சை மிளகாய் - 1

    பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

    கசகசா - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    பட்டை - 1/4 இன்ச்

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 1

    பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

    இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி குருமா ரெடி!!!

    நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் வெங்காய குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ.வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2
    கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    கடுகு - சிறிதளவு
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

    நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

    மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெங்காய குருமா ரெடி.

    கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். இன்று கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு கொண்டை கடலை - 1 கப்
    சின்ன வெங்காயம் - அரை கப்
    நறுக்கிய தக்காளி - அரை கப்
    பச்சைமிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
    கல் உப்பு - தேவையான அளவு
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - 2
    கொத்தமல்லிதழை - தேவைக்கு



    செய்முறை:

    கொண்டை கடலையை நன்றாக கழுவி 10 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு அவை பொரிந்ததும் வெங்காயத்தைகொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து கிளறுங்கள்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதைத்தொடர்ந்து கொண்டை கடலையை கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

    ஆரோக்கிய பலன்: கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோய்க்கும் நல்லது. இதை தொடர்ந்து உண்பதால் உடல் பொலிவு பெறும். படர் தாமரை போன்ற சரும பிரச்சினை வராமலும் தடுக்கும்.
    ×