search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulambu"

    • பாலக்கீரையில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
    • ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
    • பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கட்டு

    வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    புளி - 1 எலுமிச்சை அளவு

    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்துமல்லித்தழை - சிறிது

    உப்பு - சுவைக்கு

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து கொள்ளவும்.

    மசித்த கீரையுடன் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    பின் அதில் புளி கரைசல், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கீரை குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    • இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆட்டு தலை - 1

    தக்காளி - 2

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    தனியா தூள் - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் துருவல் - 1 கப்.

    செய்முறை : 

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு தலை கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    5 நிமிடம் வதக்கிய பின்னர் அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 6 விசில் போட்டு வேக விடவும். 

    குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். 

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பின்பு பரிமாறவும்.

    • ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும்.
    • இன்று ஆந்திரா ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    வெங்காயம் - 3

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    வறுத்து அரைப்பதற்கு...

    கசகசா - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 1 இன்ச்

    கிராம்பு - 2

    பச்சை ஏலக்காய் - 3

    செய்முறை:

    மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மிளகாய் தூள் மற்றும் பாதி மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பின் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

    அத்துடன் உப்பு, வறுத்து அரைத்த மசாலாப் பொடிகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி, வடிகட்டி வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    குழம்பானது கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, அதில் மிளகுத் தூளை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!!

    • தோசை, இடியாப்பம், இட்லிக்கு சூப்பராக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வேக வைக்க :

    ஆட்டுக்கால் - 4

    வெங்காயம் - 3

    தக்காளி - 2

    பச்சை மிளக்காய் - 4

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

    மிளகு தூள் - 2 தேக்கரண்டி

    தனியாத்தூள் - 2 மேசைகரண்டி

    உப்பு - தே. அளவு

    தேங்காய் - அரை மூடி

    தாளிக்க :

    எண்ணெய்

    பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி

    கொத்தமல்லி - ஒரு கொத்து

    புதினா - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.

    * ஆட்டுக்காலை நன்றாக தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு, முடியை எடுத்து விடவும்.

    * குக்கரில் ஆட்டுக்கால், நறுக்கிய முக்கால் பாகம் வெங்காயம், நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு அனைத்தையும் போட்டு கிளறி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும்.

    * விசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி மீதமுள்ள இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும்.

    * கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    * சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.

    * ஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.

    * இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான இருக்கும்.

    • பச்சை பட்டாணி குருமா ரொம்பவே ஈஸியான ரெசிபி
    • இந்த ரெசிபியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 1 கப்

    வெங்காயம் - 3

    தக்காளி - 4

    பச்சைமிளகாய் - 4

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

    கொத்தமல்லி - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தேங்காய் பால் முதல் பால் - 1 கப்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பச்சைப்பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.

    2 தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்ததாக வெட்டி நறுக்கி வைத்துள்ள 2 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் முன்பு அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.

    தொடர்ந்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    பிறகு வேகவைத்த பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கவும்.

    இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான பச்சை பட்டாணி குருமா தயார்.

    • இந்த குருமாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து சாப்பிடலாம்.
    • இந்த குருமாவை செய்ய அரை மணி நேரமே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    காலிஃப்ளவர் - 1

    பச்சை பட்டாணி - 1/4 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1/4 கப்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    முந்திரி - 5

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

    பூண்டு - 4 பற்கள்

    பச்சை மிளகாய் - 2

    பட்டை - 1/2 இன்ச்

    கிராம்பு - 1

    செய்முறை:

    முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காலிஃப்ளவரை சுத்தம் செய்து, அதனை சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசி, பின் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

    பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

    இறுதியில் வேக வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காலிஃப்ளவர் பட்டாணி குருமா ரெடி!!!

    • குடைமிளகாயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று குடைமிளகாய் சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1/2 கப்

    குடைமிளகாய் - 2

    சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்

    வெங்காயம், தக்காளி - தலா 1

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

    புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    காய்ந்த மிளகாய் - 5

    உப்பு - தேவைக்கேற்ப

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    துவரம் பருப்பு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

    இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.

    சூப்பரான குடைமிளகாய் சாம்பார் ரெடி.

    • சாம்பாரில் பல்வேறு வெரைட்டிகள் செய்யலாம்.
    • இன்று பாகற்காய் சேர்த்து சாம்பார் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - கால் கிலோ

    துவரம்பருப்பு - 1 கப்

    புளி - நெல்லிக்காய் அளவு

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    தேங்காய் துருவல் - 1 கைப்பிடி

    தனியா - 3 தேக்கரண்டி

    மிளகாய் வற்றல் - 6

    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

    கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

    வெந்தயம் - அரை தேக்கரண்டி

    சீரகம் - அரை தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - கால் தேக்கரண்டி

    பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி

    மிளகாய் வற்றல் - 2

    கறிவேப்பிலை - தேவைக்கு

    செய்முறை :

    * புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.

    * பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும்.

    * தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரில் நறுக்கி வெங்காயம், தக்காளி, துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ளவும்.

    * கரைத்த புளியை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் பாகற்காயை சேர்த்து பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.

    * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..

    * சூப்பரான பாகற்காய் சாம்பார் ரெடி.

    * தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    • வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவ குணம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 10

    தயிர் - 1 1/2 கப்

    சிவப்பு மிளகாய் - 4

    கடுகு - கால் தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    மசாலா அரைக்க

    சிறிய வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    பூண்டு - 2 பற்கள்

    தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

    செய்முறை

    வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை உப்பு சேர்த்து வறுக்கவும்

    மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிச்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் புளித்த தயிருடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்கவும்

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வறுத்த வெண்டைக்காய், தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்

    சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்

    • நண்டு குருமா இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
    • சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    நண்டு - 1 கிலோ

    வெங்காயம் - 2

    தக்காளி - 1

    பச்சைமிளகாய் - 2

    தேங்காய் பால் - 2 டம்ளர்

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லிதழை - சிறிதளவு

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்

    எண்ணெய் - 100 மிலி

    உப்பு - தேவையான அளவு

    அரைக்க தேவையானவை:

    தேங்காய் துருவல் - ஒரு கப்

    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 3 டீஸ்பூன்

    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்

    சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்

    முந்திரி - 10

    பாதாம் - 6

    பூண்டு - 5 பல்

    செய்முறை:

    நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.

    ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

    இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.

    • கருவாட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கருவாட்டில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    கருவாடு - 5 துண்டுகள்

    தக்காளி - 2 பெரியது

    வெங்காயம் - 1 பெரியது

    புளி - எலுமிச்சை அளவு

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    பூண்டு - 10 பல்

    உப்பு - தேவையான அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கீற்று

    பச்சை மிளகாய் - 1

    எண்ணெய் - தேவையான அளவு

    இஞ்சி - சிறு துண்டு

    செய்முறை:

    கருவாட்டை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வறுத்து வைக்கவும். வறுத்த கருவாட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயம், 1 தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் 1 தக்காளியை சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.

    புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

    பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.

    மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்க வேண்டும்.

    பிறகு வறுத்த கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கருவாட்டு ரசம் தயார்.

    இதற்கு நெத்திலி கருவாட்டையும் பயன்படுத்தலாம். சூப்பராக இருக்கும்.

    • இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • மட்டன் குழம்பிற்கு மாற்றாக இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் எலும்பு - 200 கிராம்,

    துவரம்பருப்பு - 50 கிராம்,

    கடலை பருப்பு - 50 கிராம்,

    கத்தரிக்காய் - 2,

    வாழைக்காய் - 1/2 காய்,

    புளி - 10 கிராம்,

    மாங்காய் - 1/2,

    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,

    பச்சை மிளகாய் - 4,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

    பட்டை - 5 கிராம்,

    பிரிஞ்சி இலை - 2,

    உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும்.

    வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரில் இரண்டு பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    ×