search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடைமிளகாய் சமையல்"

    • குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம்.
    • குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    குடைமிளகாய் - ஒன்று

    முட்டை - 2

    வெங்காயம் - ஒன்று

    தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)

    ப.மிளகாய் - 1

    கேரட் துருவியது - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும் பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

    ஒரு பௌலில் முட்டையை உடைத்து விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை அதில் வைக்கவேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குடைமிளகாயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று குடைமிளகாய் சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1/2 கப்

    குடைமிளகாய் - 2

    சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்

    வெங்காயம், தக்காளி - தலா 1

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

    புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    காய்ந்த மிளகாய் - 5

    உப்பு - தேவைக்கேற்ப

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    துவரம் பருப்பு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

    இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.

    சூப்பரான குடைமிளகாய் சாம்பார் ரெடி.

    ×