search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulambu"

    • இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்தி, இட்லியுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    சின்ன வெங்காயம் - 30

    தக்காளி - 4-

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 1

    உப்பு - சுவைக்கேற்ப

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

    தாளிப்பதற்கு...

    சோம்பு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பிரியாணி இலை - 1

    ஏலக்காய் - 5

    கிராம்பு - 5

    பட்டை - 1 துண்டு

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 10-12

    மல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - 1 கையளவு

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1 கப்

    பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும்.

    * பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.

    • பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது.
    • கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய பச்சை பயறு - 1/2 கப்

    தக்காளி - 1

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    பூண்டு - 3 பல்

    புளி - 1 எலுமிச்சை அளவு

    சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    முளைகட்டிய பச்சை பயறை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி மசித்து கொள்ளவும்.

    புளியை 2 கப் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.

    பின்பு அதில் புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.

    குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை லேசாக மசித்துப் போட்டு, மீண்டும் 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி!!!

    இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    புளி சேர்க்காமலும் இந்த குழப்பை செய்யலாம். சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மட்டன் தால்சா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 2

    தக்காளி - 2

    சின்ன வெங்காயம் - 12

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கத்திரிக்காய் - 1

    மாங்காய் - 1/2

    கொத்தமல்லி - சிறிது

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    துவரம் பருப்பு - 1/2 கப்

    கடலை பருப்பு - 1/4 கப்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    புளிச்சாறு - 1/4 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு..

    வெங்காயம் - 1/2 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    * கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    * மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.
    • சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - அரை கிலோ

    வரமிளகாய் - 18

    வெங்காயம் - 2

    பட்டை - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

    புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும்.

    வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!

    • வேப்பம் பூ அவ்வளவு கசப்பாக இருக்காது.
    • இந்த ரசம் குடிப்பதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.

    தேவையான பொருட்கள்

    வேப்பம் பூ - 2 மேஜைக்கரண்டி

    புளி - எலுமிச்சை அளவு

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 1

    பூண்டு - 6 பல்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பில்லை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    கடுகு - 1 தேக்கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    ரசப்பொடி - 2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.

    பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

    புளி கரைசலில் வெட்டிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கையால் நன்றாக பிசைந்துவிடவும்.

    தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வேப்பம் பூ போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

    இறுதியாக ரச கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.

    இப்போது மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெடி.

    இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் வைத்து சாப்பிடலாம்.

    அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.

    • வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும்.
    • ஐயர் வீட்டு வத்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சுண்டக்காய் - 1 கப்

    வெந்தயம் - 2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    வரமிளகாய் - 4

    புளி - 75 கிராம் (சாறு எடுத்துக் கொள்ளவும்)

    சின்ன வெங்காயம் - 10

    வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

    அரிசி - 1 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    அதே வாணலியை வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

    அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஐயர் வீட்டு வத்த குழம்பு ரெடி!!!

    • ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று வாழை இலை ரசம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறிய பிஞ்சி வாழை இலை - 1

    தக்காளி - 1

    காய்ந்த மிளகாய் - 3

    சீரகம் - ஒரு தேக்கரண்டி

    மிளகு - ஒரு தேக்கரண்டி

    புளி - எலுமிச்சை அளவு

    பூண்டு - 8 பல்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு, பெருங்காயம், வெந்தயம் - தாளிக்க

    செய்முறை

    வாழை இலையை நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை துண்டுகளாக வெட்டிகெள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இளம் வாழை இலை, பூண்டு, மிளகு , சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலா நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல் ,உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சுவையான ஆரோக்கியமான வாழை இலை ரசம் ரெடி.

    இதனை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.

    • காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
    • இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நல்லி எலும்பு - கால் கிலோ

    வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் - 1/4 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

    கொத்தமல்லி - கையளவு.

    மிளகு - தேவைக்கு ஏற்ப

    செய்முறை

    நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.

    இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

    • தேங்காய் எண்ணெயில் செய்யும் மீன் கறி சுவையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அயிலை மீன் - 1 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 1

    இஞ்சி - 1

    பூண்டு - 7

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    புளி - நெல்லிக்காய் அளவு

    தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்

    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    வெந்தயம் -1 டீஸ்பூன் 

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் மண் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

    அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.

    மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கேரளா மீன் கறி தயார்.

    • புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    புதினா - 1 கட்டு

    புளிக்கரைசல் - ஒரு கப்

    கீறிய பச்சை மிளகாய் - 2

    வெந்த துவரம் பருப்பு - அரை கப்

    மிளகு, சீரகம், ரசப்பொடி – தலா 2 ஸ்பூன்

    தனியா - 1 டேபிள் ஸ்பூன்

    துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெறும் வாணலியில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    புளிக்கரைசல் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    இதில் வறுத்து பொடித்த பொடி, புதினா ஆகியவற்றை சேர்க்கவும்.

    இரண்டு கப் தண்ணீர் எடுத்து வெந்த துவரம் பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும்.

    ரசம் பொங்கி, நுரைத்து வரும் பொது, கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான புதினா ரசம் ரெடி.

    • பிரசவம் ஆன பெண்களுக்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.
    • சளி, அஜீரணத்துக்கு நல்லமருந்து இந்தக் குழம்பு.

    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 1 கப்,

    பூண்டு - அரை கப்,

    தக்காளி - 3,

    புளி - எலுமிச்சை அளவு,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கு.

    அரைக்க :

    மிளகு - 3 டீஸ்பூன்,

    சீரகம் - 2 டீஸ்பூன்,

    கண்டதிப்பிலி - 2 சிறிய குச்சி,

    சுக்கு - விரல் நீளத் துண்டு,

    வால்மிளகு - அரை டீஸ்பூன்,

    அரிசி திப்பிலி - சிறிதளவு,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    தனியா - 3 டீஸ்பூன்.

    தாளிக்க :

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

    கடுகு - 1 டீஸ்பூன்,

    உளுந்து - 1 டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்.

    செய்முறை :

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு சூடுவர வறுத்து ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.

    இந்த நீருடன் தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்தெடுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கியதும் புளி கரைசலை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அரைத்து வைத்துள்ள பொடியை தூவுங்கள்.

    கிளறி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

    சளி, அஜீரணத்துக்கு நல்லமருந்து இந்தக் குழம்பு.

    • குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கை பூ நல்ல பலனளிக்கும்.
    • ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு

    தக்காளி - 1

    நெல்லி அளவு - புளி

    பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    பூண்டு - 5 பல்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் வற்றல் - 2

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

    உப்பு , எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் பொடித்த சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    பின்னர் புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். (ரசத்தை கொதிக்க விடக்கூடாது).

    இப்போது சத்தான முருங்கை பூ ரசம் ரெடி.

    ×