search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கசப்பே இல்லாத பாகற்காய் சாம்பார் செய்யலாம் வாங்க...
    X

    கசப்பே இல்லாத பாகற்காய் சாம்பார் செய்யலாம் வாங்க...

    • சாம்பாரில் பல்வேறு வெரைட்டிகள் செய்யலாம்.
    • இன்று பாகற்காய் சேர்த்து சாம்பார் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - கால் கிலோ

    துவரம்பருப்பு - 1 கப்

    புளி - நெல்லிக்காய் அளவு

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    தேங்காய் துருவல் - 1 கைப்பிடி

    தனியா - 3 தேக்கரண்டி

    மிளகாய் வற்றல் - 6

    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

    கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

    வெந்தயம் - அரை தேக்கரண்டி

    சீரகம் - அரை தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - கால் தேக்கரண்டி

    பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி

    மிளகாய் வற்றல் - 2

    கறிவேப்பிலை - தேவைக்கு

    செய்முறை :

    * புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.

    * பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும்.

    * தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரில் நறுக்கி வெங்காயம், தக்காளி, துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ளவும்.

    * கரைத்த புளியை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் பாகற்காயை சேர்த்து பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.

    * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..

    * சூப்பரான பாகற்காய் சாம்பார் ரெடி.

    * தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

    Next Story
    ×