search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளான் சமையல்"

    • இது நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • மஷ்ரூம் சுக்காவின் சுவை மட்டன் சுவைக்கு நிகராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மஷ்ரூம் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    சோம்பு - 1 ஸ்பூன்

    மிளகு - 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    தனியா - 1 ஸ்பூன்

    வர மிளகாய் - 3

    பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    கறிவேப்பில்லை - 2 கொத்து

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    மஷ்ரூமை அலசி விட்டு ஒரே மாதிரியான அளவில் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயில் மஷ்ரூமைகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மஷ்ரூம்களில் இருக்கும் அதிக தண்ணீரை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானவுடன் ( வெறும் கடாயில்) மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, தனியா, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு மிக்சிஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதில் சிறிது வெங்காயமும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

    மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு, வேக வைத்த மஷ்ரூம்களை சேர்த்து வதக்கி விட்டு, உப்பு தூவி நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.

    கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து , கலவை சுண்டி வரும் வரை வதக்கி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தூவு பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்

    தேவையான பொருட்கள்

    காளான் - 300 கிராம்

    தயிர் - 200 மில்லி கிராம்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) - 2 தேக்கரண்டி

    நறுக்கிய கொத்தமல்லி தழை - 200 கிராம்

    வெங்காயம் - 4

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

    கறி மசாலா பொடி - 1 தேக்கரண்டி

    முந்திரி பொடி - 2 தேக்கரண்டி

    உலர் தேங்காய் பொடி - 2 தேக்கரண்டி

    கசகசா - ½ தேக்கரண்டி

    தக்காளி - 2

    எண்ணெய் - 4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    2 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, வெண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மீதம் உள்ள 2 வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.

    தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் சுத்தப்படுத்திய காளான், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர்ந்த வெந்தய இலை, கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கசகசா சேர்த்து சிறிது வதக்கவும். பின்பு அதில் முந்திரி பொடி, தேங்காய் பொடி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    இதனுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.

    நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த காளான் மசாலாவைக் கொட்டிக் கிளறவும்.

    தண்ணீர் சேர்க்காமல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.

    பின்பு சிறிது கொத்தமல்லி தழை மற்றும் முந்திரி பொடியை மேலே தூவவும்.

    இப்போது சுவையான முகலாய மஷ்ரூம் ரெடி.

    இதை இட்லி, தோசை, பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்!

    • காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
    • காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது.

    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

    தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு :

    வர மிளகாய் - 4

    தனியா - 1 தேக்கரண்டி

    மிளகு - 1/2 தேக்கரண்டி

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி

    துருவிய தேங்காய் - 1 கைப்பிடி

    கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )

    தாளிப்பதற்க்கு :

    எண்ணெய் - தேவையான அளவு

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1/2 அளவு

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 1

    சோம்பு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பில்லை - 2 கொத்து

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.

    * சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.

    * காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.

    * குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

    * காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.

    * இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.

    குறிப்பு : இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.

    ×