search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறால் சமையல்"

    • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்

    முட்டை - 2

    வெங்காயம் - 2,

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - சிறிது,

    உப்பு - 1/2 ஸ்பூன்,

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,

    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இறாலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    இறால் - 1/4 கிலோ,

    இஞ்சி - 1 துண்டு,

    பூண்டு - 5 பல்,

    பச்சைமிளகாய் - 5,

    சின்ன வெங்காயம் - 100 கிராம்,

    சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்,

    மஞ்சள் தூள்- 10 கிராம்,

    நல்லெண்ணெய் - 10 மி.லி.,

    எலுமிச்சை பழம் - 1,

    உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

    செய்முறை

    இறாலை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த இறாலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் அரைத்த இறாலை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    இறால் வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான இறால் புட்டு ரெடி.

    • கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தது இறால்.
    • ‘இறால் பால்ஸ்’ எவ்வாறு சமைப்பது என்பதை இங்கு காணலாம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம்

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    முட்டை - 1

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் பெரியது - 1

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுடன், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    ஊறவைத்த இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இறாலுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின்பு முட்டையை சிறிய பாத்திரத்தில் நன்றாக அடித்துக் கலக்கவும். அதனை இறாலுடன் சேர்த்துக் கிளறவும்.

    பின்னர் அதில் சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

    இந்த இறால் உருண்டைகளை மீதமிருக்கும் ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி 30 நிமிடங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

    பின்பு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அது நன்றாக சூடானதும், அதில் இறால் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    அதன் மேல் சிறிது கொத்தமல்லித்தழையைத் தூவவும்.

    இப்பொழுது மொறுமொறு இறால் பால்ஸ் தயார்.

    இதனுடன் சில்லி சாஸ் கலந்த மயோன்னசை சேர்த்து சாப்பிடலாம்.

    • கேரளாவில் இறால் மொய்லி மிகவும் பிரபலமான உணவு.
    • இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    இறால் - அரை கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி -1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    பூண்டு - 4 பல்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தேங்காய் பால் - 2 கப் (முதல் பால்)

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு/வினிகர் - 1 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - கால் கப்

    செய்முறை

    இறாலை நன்கு சுத்தம் செய்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

    இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் இறால் மற்றும் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

    நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து ஒரு நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றவும்.

    பின்பு தேங்காய் பாலைச் சேர்க்கவும்.

    நுரைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

    சுவையான இறால் மொய்லி தயார்.

    இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    ×