search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khushbu"

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இதையடுத்து தமிழகத்தில் உள்ள மால்களில் இன்று முதல் இப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.


    இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துபவர்கள் எதை கண்டு அச்சம் கொள்கின்றனர் என்றே தெரியவில்லை. வெளிப்படையாக கூறப்பட்ட உண்மையா அல்லது இந்த உண்மையின் அங்கமாக பல ஆண்டுகளாக அமைதியாகவும், தெரியாமலும் இருந்ததா என்று புரியவில்லை. எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானம் செய்து கொள்ளட்டும். நீங்கள் யாருக்காகவும் முடிவெடுக்க வேண்டாம். காட்சிகளை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு நொண்டி காரணங்களை கூறி வருகிறது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க செய்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • குஷ்பு தமிழில் நடிக்க தொடங்கியதும் தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார்.
    • விரைவாகவே டப்பிங் பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

    தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகை குஷ்பு இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குஷ்பு தமிழில் நடிக்க தொடங்கியதும் தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். விரைவாகவே டப்பிங்கும் பேச ஆரம்பித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தாலும் தெலுங்கில் அதிக அளவு நடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தெலுங்கு திரையுலகம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாறியதால் தான் தெலுங்கில் அதிக அளவில் நடிக்க முடியாமல் போனது. ஏற்கனவே எனது குடும்பத்தினரை மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்துவிட்ட நிலையில் மீண்டும் ஹைதராபாத்துக்கு செல்ல விரும்பவில்லை.

    தற்போது சினிமா உலகம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அப்போது கேரவன் வசதி எல்லாம் கிடையாது. அந்த காலத்தில் நாங்கள் இருட்டு அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேக்கப் போடுவோம். பாத்ரூமில் உடை மாற்றுவோம். மேக்கப் இல்லாத போது மஞ்சள் பொடியை வைத்து முகத்தில் கலர் கரெக்ஷன் செய்தோம். அது கோவில் காட்சிகளுக்கு கை கொடுத்தது. தற்போது கிராபிக்ஸ் தொழில் நுட்பம் வந்து விட்டது. எல்லாமே மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • வாய் ஜாலத்தில் தி.மு.க.வினர் கில்லாடிகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.
    • ஒரு அரசு என்பது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.

    சென்னை:

    தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரும் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-

    வாய் ஜாலத்தில் தி.மு.க.வினர் கில்லாடிகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    எப்போதுமே தி.மு.க.வின் பேச்சு ஒரு மாதிரி இருக்கும். செயல் வேறு மாதிரி இருக்கும்.

    அதே போலத்தான் தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 3 கோடியே 60 லட்சம் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் 80 லட்சம் பேரை தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்து உரிமைத்தொகை வழங்க இருக்கிறார்களாம்.

    அப்படியானால் 2½ கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கு உரிமை இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். எந்த தகுதியின் அடிப்படையில் பெண்களை பிரித்தீர்கள்? தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லி இந்த பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

    வறுமை கோட்டை தாண்டி விட்டார்களா? வசதியான வாழ்க்கை வாழுகிறார்களா? எதை அடிப்படையாக வைத்து தகுதியை நிர்ணயித்தீர்கள்? தேர்தல் நேரத்தில் இதை நேரடியாக சொல்லி இருக்கலாமே. சொன்னால் வாக்கு விழாது என்ற பயம். அதனால் தான் பொய்யான வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி பேசி ஏமாற்றி இருக்கிறது.

    ஒரு அரசு என்பது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால் தி.மு.க. தனது பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த விசயத்திலும் காட்டி உள்ளது. இதற்கு பெண்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை குஷ்புவின் அண்ணன் உடல் நிலை சரியில்லாத நிலையில் இன்று காலமானார்.
    • இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.


    குஷ்பு

    இவர் சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.


    குஷ்புவின் அண்ணன்

    இந்நிலையில், இன்று குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் காலமானார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள குஷ்பு, "உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.



    • காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை.
    • இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.

    வாரணாசி:

    காசியில் நடந்துவரும் தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநில மந்திரி சஞ்சீவ் கோண்ட் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப்பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமாக உள்ளது. காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள்காட்டி பேசுகிறார். தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.

    இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறைய கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்த தலைமுறைக்கும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத் மாநிலம் தான் பிரதமர் மோடியை நாட்டுக்கு அடையாளம் காட்டியது.
    • மும்முனை போட்டி என்கிறார்கள். ஆனால் களத்தில் காங்கிரசை காணவில்லை.

    ராஜ்கோட்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழில் முன்னணி நடிகையுமான குஷ்புவை குஜராத் தேர்தல் களத்தில் பா.ஜனதா இறக்கி உள்ளது.

    நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    நேற்று ராஜ்கோட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது.

    குஜராத் தேர்தல் பிரசாரம் மற்றும் கள நிலவரம் பற்றி குஷ்பு கூறியதாவது:-

    குஜராத் மாநிலம் தான் பிரதமர் மோடியை நாட்டுக்கு அடையாளம் காட்டியது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல் மந்திரியாக இருந்தவர் மோடி... காங்கிரசின் கைகளில் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியால் வழங்க முடியாத வளர்ச்சியை கடந்த 20 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.

    அதனால்தான் எங்கு சென்றாலும், மோடி... மோடி இதுதான் அங்குள்ள மக்களின் மந்திரமாக உள்ளது. அவர்களை பொறுத்தவரை இப்போதும் மோடி சர்க்கார் நடப்பதாகவே நினைக்கிறார்கள்.

    மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 27 தொகுதிகள் பழங்குடியினர் தொகுதி. பழங்குடியினர் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது மோடி ஆட்சியில்தான் என்கிறார்கள்.

    அடிப்படை வசதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை இல்லை. எந்த பக்கம் சென்றாலும் மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் வரவேற்கிறார்கள். இந்த முறையும் பா.ஜனதா ஆட்சிதான் என்பதைவிட இதுவரை பெற்றதை விட கூடுதலான தொகுதிகளில் பா.ஜனதா வெற்றிபெறும் என்பது உறுதி.

    மும்முனை போட்டி என்கிறார்கள். ஆனால் களத்தில் காங்கிரசை காணவில்லை. அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பிரசாரத்துக்கு செல்லமாட்டார். எங்கு தேர்தல் இல்லையோ அங்குதான் சென்று தேர்தல் பிரசாரம் செய்வார்.

    இப்போதும், தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார். போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் எதிர்பாராத தோல்வியை சந்திக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியில் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?
    • இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

    சென்னையில் 66 இடங்களில் நடைபெற்றது. இதில் அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல் தலைவர் சத்யராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

    தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.

    மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?

    முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் எழுதி கொடுப்பதைத்தான் படிப்பது வழக்கம்.

    மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள்.

    இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை.

    இதே நிலை தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.

    இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள்.

    தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார்.

    இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது தொடரும். அண்ணாமலை தலைமையில் தாமரை மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகணேஷ், திருவொற்றியூர் மேற்கு மண்டல் தலைவர் பாலு ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தண்டையார்பேட்டையில் மண்டலத் தலைவர் வீரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கொருக்குப்பேட்டை காரனேசன் நகரில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் போஸ்கோ மாணிக்கம், சக்திவேல், அருள் முருகன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர ராஜ், கோவிந்த ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புறநகர் பகுதிகளான தாம்பரம், பம்மல், பெருங்க ளத்தூர், சிட்லபாக்கம், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருங்களத்தூர் பகுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொற்றாமரை சங்கரன் மண்டல தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் பால் பாக்கெட்டை கீழே கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பழனி வேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிட்லபாக்கத்தில் மாவட்ட செயலாளர் வேதசுப்ரமணியம் தலைமையிலும் பம்மலில் வழக்கறிஞர் அலேக்ஸ் சுதாகர் தலைமையிலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல தலைவர் கணேஷ் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊரப்பாக்கத்தில் மாவட்ட தலைவர் டி.ஜி.மோகனராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் விளையாட்டு பிரிவு மாநில துணை தலைவர் பாலாஜி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல.
    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாகர்கோவில்:

    சென்னையில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் சைதை சாதிக் என்பவர் பா.ஜ.க.வில் உள்ள நடிகைகள் குஷ்பு, கவுதமி, காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூம் பங்கேற்றிருந்தார்.

    இந்தநிலையில் இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு தண்டனை காலம் முடிவதற்குள் அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பா.ஜனதா கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா?
    • உங்கள் மாநிலத்தில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் நீங்கள்.

    சென்னை:

    தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் சமீபத்தில் நடிகை குஷ்புவை பொதுக்கூட்ட மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக விமர்சித்து பேசினார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக கனிமொழி எம்.பி. ஒரு பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். அதற்கு குஷ்பு பதிலுக்கு நன்றி கூறினார்.

    இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குஷ்புவை அதிருப்தி அடைய செய்து உள்ளது. இது தொடர்பாக அவர் ஆவேசமாக கூறியதாவது:-

    மிகவும் கீழ்த்தரமாக பொதுமேடையில் பேசியதை தமிழகமே கேட்டு உள்ளது. பேசியவர் மன்னிப்பு கேட்டாயிற்றே இத்துடன் இந்த பிரச்சினையை விட்டு விடலாமே? என்று தி.மு.க.வை சேர்ந்த சிலர் பேசுகிறார்கள்.

    அவர்களுக்கு நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். உங்கள் குடும்ப பெண்களையும் இதே போல் ஒருவர் பேசினால் நீங்கள் பரவாயில்லை விட்டு விடுவோம் என்று சும்மா விட்டு விடுவீர்களா?

    இந்த சம்பவத்தால் என் மனசு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதை பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்ந்து புரிந்து கொள்வார்கள்.

    இதை நான் சாதாரணமாக விட்டு விடப்போவதில்லை. தேசிய மகளிர் ஆணையத்தில் வழக்கு தொடுக்க போகிறேன். எனக்கும் 19 மற்றும் 22 வயதில் 2 மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்.

    உன்னை எவ்வளவு தரக்குறைவாக பொது மேடையிலேயே பேசிய போதும் நீ தைரியமாக என்ன செய்தாய்? என்று என் மகள்கள் என்னிடம் கேட்பார்கள் அல்லவா?

    என் மகள்களை போல எத்தனையோ பெண் குழந்தைகள் என்னை ஒரு ரோல் மாடலாக ஏற்று இருக்கிறார்கள்.

    நான் பயந்து ஒதுங்கினால் அவர்கள் எல்லாம் என்னை பற்றி என்ன நினைப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் தைரியமாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் அல்லவா?

    பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா? அப்படி பேசியவரை அப்படியே விட்டு விடலாமா?

    இந்த பிரச்சினையில் நான் பயந்து ஒதுங்கி விடவும் மாட்டேன். விட்டு விடவும் மாட்டேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் தூங்கி விழிக்கும்போது பயந்து கொண்டே எழும்புவதாகவும், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் யார் என்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ? என்று நினைத்து கொண்டு தூக்கமின்றி தவிப்பதாக கூறியிருந்தார்.

    இப்போது அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் ஒருவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார். நாகரீகமே இல்லாமல் பேசிய அவர் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை?

    நான் முதல்-அமைச்சரிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி இது தான். வேறு எந்த கட்சிக்காரர்களாவது உங்கள் கட்சியை சேர்ந்த பெண்களை இது போல பேசி இருந்தால் சும்மா விட்டு விடுவீர்களா? இதற்குள் வழக்கு போட்டு உள்ளே தள்ளி இருப்பீர்கள். அவர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று அதகளம் செய்து இருப்பீர்கள்.

    ஆனால் நான் பாரதிய ஜனதாவில் இருப்பதால் தான் நீங்கள் இதை கண்டு கொள்ளவில்லை. இதுவரை மவுனம் காத்து வருகிறீர்கள். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடாதவர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்கள் மாநிலத்தில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் நீங்கள்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு பெண் பாதிக்கப்பட்டும் நீங்கள் எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்? யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகவும் அபாயகரமானது.

    உங்கள் கட்சிக்காரர்களால் உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். இப்போது உங்கள் கட்சிக்காரர்களால் எங்களை போன்ற பெண்களுக்கு தூக்கம் கெட்டு போகிறதே? இதற்கு பதில் சொல்வது யார்? இந்த விவகாரத்தை நான் சாதாரணமாக விடப்போவது இல்லை.

    இனிமேலும் யாரும் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவித்து முன் வரும் கட்சிகள் எல்லாம் இப்போது எங்கே போனது. ஏன் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

    மற்ற கட்சிகளில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நியாயம், பாரதிய ஜனதாவில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நியாயமா?

    இவ்வாறு குஷ்பு கூறினார்.

    • ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கனிமொழி கூறினார்.
    • கனிமொழியின் பதிவுக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவை சேர்ந்த நடிகைகள், குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

    சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

    தி.மு.க. இதை பொறுத்துக்கொள்ளாது. இதற்காக எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கனிமொழியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் சைதை சாதிக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.
    • பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

    தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    டுவிட்டரில் குஷ்பு, ஆண்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தால் அது அவர்கள் வளர்ந்த வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது.

    பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இத்தகைய ஆண்கள், தங்களை கருணாநிதியை பின்பற்றுபவர்கள் என்று சொல்லி கொள்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுதான் புதிய திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்.

    இதை யார் பேசியிருந்தாலும், அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு போதும் இந்த நடத்தையை ஏற்க முடியாது.

    இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தனது தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.

    ×