search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் விலை உயர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாகிறது. காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும்.
    • அரசாங்கம் பால் வினியோகத்தை கண்காணித்து அதிகாலையிலேயே பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாகிறது. காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும்.

    சென்னையில் ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, பச்சை, புளூ என 3 வகை பாக்கெட்டுகளில் புழக்கத்தில் விற்பனையில் உள்ளது.

    இதில் ஆரஞ்சு பால் பாக்கெட் கார்டுதாரராக இருந்தால் ½ லிட்டர் 24 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆவின் பார்லரில் வாங்கினால் 30 ரூபாய் கொடுக்க வேண்டும். மளிகை கடைகளில் 32 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்.

    கிரீன் பால் பாக்கெட் ½ லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.20-க்கு கிடைக்கும். பார்லரில் ரூ.22-க்கும் மளிகை கடைகளில் ரூ.24-க்கும் கிடைக்கிறது.

    புளூ பாக்கெட் பால் ½ லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.18.50-க்கு கிடைக்கிறது. ஆவின் பார்லரில் 20 ரூபாய்க்கும் மளிகை கடைகளில் ரூ.22-க்கும் விற்கப்படுகிறது.

    இதுகுறித்து மளிகைக் கடைக்காரர் கூறுகையில், பால் பாக்கெட்டுகளை எங்கள் கடைக்கு கொண்டு வருபவர் 50 பைசா லாபம் வைத்துதான் எங்களிடம் தருவார். எங்களுக்கு அடக்க விலையே 20 ரூபாய் 50 பைசா ஆகிவிடுகிறது. அதன் மீது நாங்கள் ரூ.1.50 வைத்து 22 ரூபாய்க்கு பால் பாக்கெட்டை விற்கிறோம்.

    ஆனால் சூப்பர் மார்க்கெட்டை பொறுத்த வரை அவர்கள் பில்போடுவதால் எம்.ஆர்.பி. விலை ரூ.20-க்குதான் விற்க வேண்டும். அதைவிட கூடுதலாக இப்போது விற்பதாக தகவல் வருகிறது.

    சென்னையில் ஆவின் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் இதற்கு முன்பு வந்து விடும். ஆனால் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது காலதாமதமாக கிடைக்கிறது. எனவே அரசாங்கம் பால் வினியோகத்தை கண்காணித்து அதிகாலையிலேயே பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    • பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையாக இல்லை.
    • விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.

    நாமக்கல்:

    நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு உப தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். பால் உற்பத்தி மூலம், அவர்களின் அன்றாட செலவுக்கான, பொருளாதார தேவைகளை ஈட்டி வருகின்றனர்.

    தற்போது கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரக் கூடியதாக இல்லாமல், கடினமான வேலையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்வதற்கு மாட்டுத் தீவனம் விலை, வேலை ஆட்கள் கூலி பலமடங்கு உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களின் வாடகை பெருமளவு உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பால் விலையை உயர்த்தி கொடுக்க கோரி ஏற்கனவே பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஒரு லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலை உயர்த்தி பசும்பால் லிட்டர் 1-க்கு ரூ.35-ம், எருமைப்பால் லிட்டர் 1-க்கு ரூ.44-ம் தமிழக அரசு அறிவித்தது.

    பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையாக இல்லை.

    பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட பேராட்டங்கள் நடத்தியும், தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது.

    எனவே பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி அறிவிக்க வேண்டுகிறோம். அப்படி அறிவிக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்ட ஆவின் நிர்வாகம் முழு அளவில் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மதுரை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக பால் உற்பத்தியாளர்கள் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருமங்கலம்,

    தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ. 31-ல் இருந்து ரூ.40-ஆக உயர்த்தி தரவேண்டும் என கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பாலை அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆவின் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் தேவைப்படுகிறது ஆனால் தற்போது போராட்டம் காரணமாக உற்பத்தியாளர்கள் மூலம் கொண்டு வரப்படும் பால் அளவு குறைந்துள்ளது. எனினும் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாகம் முழு அளவில் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக பால் உற்பத்தியாளர்கள் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி 7-வது நாளான இன்றும் போராட்டம் நீடித்தது. திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் திருமங்கலம்-அத்திப்பட்டி சாலையில் திரண்டனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை நடுரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்துக்கு மதிப்பனூர் பால் பண்ணை தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் பெரிய கருப்பன், நிர்வாகிகள் உக்கிர பாண்டியன், கோவிந்தபாண்டி, சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு அதனை கொண்டு கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அழைப்பு விடுக்க வில்லை. இதன் காரணமாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனத்தை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவின் நிறுவனம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி அரசு உடனே கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்றனர்.

    • உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    • பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

    உசிலம்பட்டி:

    பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் கடந்த 17-ந் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆவின் நிறுவனத்துக்கு குறைத்து பால் வழங்கி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் நேற்று பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்த 100 லிட்டர் பாலை சாலையில் கொட்டினார்கள். மேலும் தங்களது கறவை மாடுகளுடன் வந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து பால் உற்பத்தியாளர்கள் நலசங்க தலைவர் பெரியகருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி ஆகியோர் கூறியதாவது:-

    பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த போராட்டம் அடுத்தடுத்த பகுதிகளுக்கு விரிவடைந்து வருகிறது. இதனால் அரசு பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்திற்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

    • பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    உசிலம்பட்டி:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் நிரப்பி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

    பால் கொள்முதல் விலையை ரூ.7-ல் இருந்து ரூ.10 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். தனியார் பால் நிறுவனங்கள் அரசு வழங்கும் கொள்முதல் விலையை விட அதிகமாக வழங்குகிறது. எனவே ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் நலனை விரும்பி உடனே கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இதற்கு அரசு உடனடி நடவடிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த வாரம் முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டத்தை நடத்து கின்றனர். இதனால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே சக்கரைப்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இன்று காலை மதுரை-செல்லம் பட்டி மெயின் ரோட்டில் திரண்டனர். அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் மாடுகளுக்கு தீவனம், பராமரிப்பு பணிக்காக செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்த செலவுகளை எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை அரசு உயர்த்தி தர வேண்டும் என்றனர்.

    • கோவையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், மாட்டு தீவன மானியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    வடவள்ளி:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று கோவையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலாந்துறையில் உள்ள நாதேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே 150 லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.

    பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், மாட்டு தீவன மானியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்துக்கு தமிழக விவசாய சங்க தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருட்களுக்கும் சரியான விலை கிடைப்பது இல்லை. பாலுக்கான கொள்முதல் விலை குறைந்த அளவே வழங்கப்படுவதால் மாடுகளை வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மாடு ஒன்றுக்கு ஒரு நாள் பராமரிப்பு செலவு ரூ.250 ஆகிறது. நஷ்டத்திற்கு இடையே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பாலகம் உற்பத்தி லாபத் தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

    ஆனால் பக்கத்து மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் வரை அரசு கொடுக்கிறது. தமிழக அரசால் ஏன் கொடுக்க முடிவதில்லை. எனவே அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் வரையில் விலை கொடுக்க வேண்டும்.பால் விலையை உயர்த்த வில்லை என்றால் ஒரு வாரத்தில் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பாலகத்தை முற்றுகையிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால் விலை உயர்வு சாதாரண மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை உயர்த்தப்படாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவன பால், தயிர், பால் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்த்தப்படுவது ஏற்புடையதல்ல.

    கடந்த 2022-ம் ஆண்டு அரசின் ஆவின் நிறுவனம் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை உயர்த்தியதும், தனியார் பால் நிறுவனங்கள் 4 முறை பால் விலையை உயர்த்தியதும், இந்த வருடம் இப்போது தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி விற்பனை செய்வதும் சாதாரண மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி, தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை உயர்த்தப்படாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
    • மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

    மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையாக பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைத்து, பாலுக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, சீனிவாசா ஆகியவை ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி உள்ளன.
    • பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

    சென்னை:

    அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன.

    ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவற்றுக்கு தனியார் பால் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில் விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா ஆகியவை ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி உள்ளன.

    இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (20-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது. (ஆவின் நீல நிற பாக்கெட் ரூ.40), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்கிறது.

    ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.20 அதிகமாகும். நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது. ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60 ஆகும். தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது.

    தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

    தனியார் பால் நிறுவனம் தன்னிச்சையாக விலை உயர்த்துவதை தடுக்க வேண்டும். பால் கொள்முதல், விற்பனை விலையை அரசு நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது.
    • பால் விலை உயா்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நீலநிற பாக்கெட்டில் விற்பனையாகும் டோண்ட் மில்க் லிட்டர் ரூ.42-ல் இருந்து ரூ.46 ஆகவும், ஸ்பெஷல் டோண்ட் மில்க் (பச்சை நிற பாக்கெட்) லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆகவும், ஸ்டாண்டர்டு மில்க் (ஆரஞ்சு நிற பாக்கெட்) ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த பால் விலை உயா்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    • அரசூரில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.

    விழுப்புரம்:

    பா.ஜனதா கட்சி சார்பில் மின்சாரம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசூர் கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் வைத்திலிங்கம், கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பால் மற்றும் மின்சார விலை உயர்வை கண்டித்து பிறமொழி மாவட்ட தலைவர் மாரி கண்டன உரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் சிவபாலன், ஒன்றிய பொதுச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஹரி பாவாடைராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    இந்நிலையில், பொன்னேரி அண்ணா சிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர துணைத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

    மேலும், பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதி கேசவன், பிறமொழி பிரிவு மாவட்டத் தலைவர் பிரகாஷ் சர்மா, மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் சோமு ராஜசேகர், தாட்சாயினி மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×