search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthigai"

    • அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
    • இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து,

    அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட

    மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து,

    அய்யப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

    இதன் மூலம் அய்யப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

    • சபரிமலை யாத்திரை முதன் முதலாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை.
    • பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    சபரிமலை யாத்திரை முதன் முதலாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை.

    இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்றும் கூறுவர்.

    மண்டல காலமாகிய, கார்த்திகை முதல் நாளில் இருந்து, மார்கழி பதினொன்றாம் தேதிக்குள், வீட்டில் இச்சடங்கை நடத்துவதற்கு நாள் குறித்து விட வேண்டும்.

    பந்தலிட்டு, அதன் நடுப்பகுதியில் மண்டபம் அமைக்க வேண்டும்.

    மண்டபத்தின் நடுவில் அய்யப்பன் படம் வைத்து, சுற்றிலும் கணபதி, மாளிகைப் புறத்தம்மன், கருப்ப சுவாமி,

    கடுத்தை சுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றிற்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும்.

    எல்லா தெய்வங்களுக்கும் அவல், பொரி, பழம், வெற்றிலை, பாக்கு, சித்ரான்னம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    • மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகியவற்றில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
    • பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல்

    ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    இதனை 'திரிகரணசுத்தி' என்பர்.

    அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும்.

    தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது.

    பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும்,

    மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

    • கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
    • குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். வாழ்வில் வளம் பெருகும்.

    கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

    தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும்.

    மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும்.

    திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.

    மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும்.

    குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    • 1000 வேப்பெண்ணெய் தீபங்கள் = 1 இலுப்பெண்ணெய் தீபம்
    • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும்போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    1000 நெய் தீபங்கள் = 1 தேங்காய் எண்ணெய் தீபம்

    1000 தேங்காய் எண்ணை தீபங்கள் = 1 நல்லெண்ணை தீபம்

    1000 நல்லெண்ணை தீபங்கள் = 1 விளக்கெண்ணெய் தீபம்

    1000 விளக்கெண்ணெய் தீபங்கள் = 1 வேப்பெண்ணெய் தீபம்

    1000 வேப்பெண்ணெய் தீபங்கள் = 1 இலுப்பெண்ணெய் தீபம்

    தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்,

    குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    • தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.
    • சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.

    குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.

    ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம்,

    சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக,

    பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக  தீபம் ஏற்ற வேண்டும்.

    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க

    அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவண பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க,

    ஆறு உருவங்களும் ஒரு உருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி "உங்களுக்கு மங்களம் உணடாகுக.

    உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தை சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டவதாகு"

    என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும்,

    அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    • மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
    • இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவது.

    மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வற்றில் தீபத் திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும்.

    இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவி பெற்றார்.

    இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டி கவசம்,

    சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது.

    • தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
    • சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

    இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

    கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்ரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளன.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

    இதுதான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக் கூடியவை.

    சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீபங்கள் தீய சக்திகளை அண்டா வண்ணம் காக்கக் கூடியவை. வேண்டும் பலனைத் தரக்கூடியவை.

    சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவலோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம்.

    தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது.

    மிகுந்த புண்ணியம் சேரும்.

    சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுவிறவியில் மகாபலி சக்கரவரத்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.

    திருக்கார்த்திகை திருநாளன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம்.

    ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும்.

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள்.

    • கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.
    • ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

    1. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    2. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது.

    எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

    3. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

    4. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

    5. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும்

    ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

    6. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

    7. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

    8. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும்.

    ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில்

    குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

    9. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும்.

    கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.

    10. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

    11. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.

    12. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    13. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    14. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

    15. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    16. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

    17. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

    18. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

    19. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

    20. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள்.

    இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.

    மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    21. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

    மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

    நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    22. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

    23. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.

    அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

    24. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

    25. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

    • கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.
    • இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.

    சபரிமலையில் 18ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.

    கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.

    கொடி மரத்தின் உச்சியில் அய்யப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.

    கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது.

    சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.

    இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும்.

    எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.

    • மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.
    • சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற

    தேவதை போன்ற அழகிய பெண் வெளிவந்து அய்யப்பனை வணங்கி

    "நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்.

    என் சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வேண்டும்.

    என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினாள்.

    மணிகண்டனாகிய அய்யப்பன் அவளிடம் "நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்.

    எனவே உன்னை ஏற்க இயலாது" என்று கூறி அவளது வேண்டுகோளை நிராகரித்தார்.

    அதோடு அந்தப் பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் கோவிலில்

    மாளிகைப்புறத்தம்மா என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதன்படி பக்தர்கள் மாளிகைப் புறத்தம்மன் எனக் கூறப்படும் மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும்,

    தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.

    சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    திருமணம் கை கூடுவதற்காக சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டு கொடுத்து ஒன்றைத்திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

    ×