search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallidaikurichi"

    • தற்கொலை செய்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன்பின்னர் படிப்பை நிறுத்தி விட்டான்.
    • கடந்த 2 வருடமாக கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி கோட்டைவிளை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் கிருஷ்ணகுமார்(வயது 15). இவன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன்பின்னர் படிப்பை நிறுத்திவிட்டான்.

    கடந்த 16-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்து மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவன் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 வருடமாக கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆழ்வார்குறிச்சி பிரிவுக்கு உட்பட்ட சம்பன் குளம் பகுதியில் மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
    • ரூ.12 லட்சத்தில் 3 புதிய 25 கிலோவாட் மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் ஆழ்வார்குறிச்சி பிரிவுக்கு உட்பட்ட சம்பன் குளம் பகுதியில் மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

    இதையடுத்து மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன் ராஜ் உத்தரவின்பேரில் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் மேற்பார்வையில் ரூ.12 லட்சத்தில் 3 புதிய 25 கிலோவாட் மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    விரைந்து செயல்பட்ட விக்கிரமசிங்கபுரம் உதவி செயற்பொறியாளர் ராஜகிளி, ஆழ்வார்குறிச்சி உதவி மின் பொறியாளர் விஜயராஜ் மற்றும் பணியாளர்களின் கடமைகளை பாராட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், தர்மபுரம் மடம் ஊராட்சி தலைவர் ஜன்னத் சதாம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்த கோகிலா. இவர் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
    • போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் ஆய்வுசெய்தபோது 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்த கோகிலா. இவர் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த மாதம் 6-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 22 கிராம் தங்க நகை, ரூ.40 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கோகிலா கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கீழ வைராவிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வசந்த கோபி (வயது 22), அடையகருங்குளம் உல்லாச நகரை சேர்ந்த கண்ணன் (46), இசக்கி பாண்டி (34), இளையராஜா (30) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.

    • கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கடையம் துணை மின் நிலையத்தில் ஆவுடையனூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த கோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    அதன்படி, ஒ.துலூக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை,

    வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பை துணை மின் நிலையத்தில் ஊர்க்காடு, அம்பை, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி,

    மணிமுத்தாறு துணை மின் நிலையத்தில் மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கடையம் துணை மின் நிலையத்தில் ஆவுடையனூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • விவசாயியிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு உறவினர்கள் அறிவுரை கூறிவந்தனர்.
    • கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உலுப்படி பாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் கொம்பன் (வயது 49) விவசாயம் செய்து வந்தார்.

    இவருக்கு மனைவியும், 2மகளும்,1மகன் உள்ளனர்.இவர் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

    இதனால் உறவினர்கள் கொம்பனிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறிவந்த நிலையில் மனவேதனையில் இருந்த கொம்பன் 2 நாட்களுக்கு முன் விஷம் குடித்தார்.

    அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லிடைக்குறிச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப்
    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மேல்நிலைப்பள்ளி அருகே வெள்ளங்குழியைச் சேர்ந்த சரவணன் முருகன் என்ற முருகன் சேட் ( வயது 40), தெற்கு கல்லிடைக்குறிச்சி தெற்கு பகுதியைச் சேர்ந்த பலவேசம் (வயது 36) ஆகிய இருவரும் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சரவண முருகன் என்ற முருகன் சேட், பலவேசம் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 1,290 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.

    • நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை
    • முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி

    கல்லிடை:

    கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவுத் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், கைத்தறி வளர்ச்சி ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கைத்தறி சேவை மைய இயக்குநர் முத்துசாமி, நெல்லை சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் சங்கரேஸ்வரி ஆகியோர் ஆலோசனையின் பேரில் முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி பாளையங்கோட்டை, பேட்டை, பழைய பேட்டை, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, தெற்கு கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, வீரவநல்லூர், கிளாக்குளம், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கல்லிடைக்குறிச்சி கைத்தறி நெசவாளர்கள், நெசவு சார்ந்த தொழிலாளர்களுக்கு நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் மாரிமுத்து முன்னிலையில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது,

    இதில், கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, ஷேக் அப்துல் காதர், துணைத்தலைவர்கள் சாகுல்ஹமீது, பாடகலிங்கம், நெசவாளர் சேவை மைய முதுநிலை அதிகாரி சச்சின், இளநிலை அதிகாரி தீலிபன், கைத்தறி சங்க மேலாளர்கள் நடேசன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×