search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பை, கல்லிடைக்குறிச்சியில்  2-ந்தேதி மின்தடை
    X

    அம்பை, கல்லிடைக்குறிச்சியில் 2-ந்தேதி மின்தடை

    • கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கடையம் துணை மின் நிலையத்தில் ஆவுடையனூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த கோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    அதன்படி, ஒ.துலூக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை,

    வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பை துணை மின் நிலையத்தில் ஊர்க்காடு, அம்பை, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி,

    மணிமுத்தாறு துணை மின் நிலையத்தில் மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கடையம் துணை மின் நிலையத்தில் ஆவுடையனூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×