search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்து சிறுவன் தற்கொலை
    X

    கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்து சிறுவன் தற்கொலை

    • தற்கொலை செய்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன்பின்னர் படிப்பை நிறுத்தி விட்டான்.
    • கடந்த 2 வருடமாக கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி கோட்டைவிளை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் கிருஷ்ணகுமார்(வயது 15). இவன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன்பின்னர் படிப்பை நிறுத்திவிட்டான்.

    கடந்த 16-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்து மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவன் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 வருடமாக கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×