என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் புகையிலை விற்ற 2பேர் கைது
- கல்லிடைக்குறிச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப்
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மேல்நிலைப்பள்ளி அருகே வெள்ளங்குழியைச் சேர்ந்த சரவணன் முருகன் என்ற முருகன் சேட் ( வயது 40), தெற்கு கல்லிடைக்குறிச்சி தெற்கு பகுதியைச் சேர்ந்த பலவேசம் (வயது 36) ஆகிய இருவரும் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சரவண முருகன் என்ற முருகன் சேட், பலவேசம் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 1,290 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.
Next Story