search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joe Root"

    • தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும்.

    மெல்போர்ன்:

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோரூட் முதல் போட்டியில் சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கிடைத்தது. அதோடு ஜோரூட் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.

    இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (15,921) சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜோரூட் மிகவும் பிரமாதமாக ஆடி வருகிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும். உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவரால் 15,000 ரன்னுக்கு மேல் எடுக்க இயலும்.

    இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.

    • ஜோ ரூட் சதம் அடித்ததால், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 141 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.

    9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார். இதனைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின் சதம் அடித்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கேப்டனாக இருந்த அலஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆவார்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த ஜோ ரூட்டிற்கு, இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக திகழும் ஜோ ரூட், கெய்ல் போன்று சிக்ஸர்கள் விளாச முடியாது என்று தெரிவித்துள்ளார். #JoeRoot
    இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 350-க்கு மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்யும்போது சதம் அடித்து அசத்தினார்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட், டி20 கிரிக்கெட்டில் அதிக அளவில் விளையாடியது கிடையாது. ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் சில போட்டிகளில் விளையாடினார்.

    இந்நிலையில் கிறிஸ் கெய்ல் போன்று என்னால் சிக்ஸர்கள் விளாச முடியாது. ஆனால் விரைவாக ரன்கள் குவிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நான் அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. டி20 போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். அதில் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கும்போது, அந்த வாய்ப்பை தவறவிட விரும்ப மாட்டேன்.

    கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசுவதுபோல் என்னால் அடிக்க இயலாது. ஆனால் விரைவாக ரன்கள் குவிக்க இயலும். அவரைப்போல் கேலரிகளுக்கு பந்தை அனுப்ப இயலாது. ஆனால், 95 மைல் வேகத்தில் வரும் பந்தை டாப் எட்ஜ் மூலம் சிக்சருக்கு விளாச முடியும்’’  என்றார்.
    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுடன் நடந்த வாக்குவாதம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் விளக்கம் அளித்துள்ளார். #WIvENG #ShannonGabriel #JoeRoot
    செயின்ட் லூசியா:

    செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில் நின்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஓரின சேர்க்கையாளருடன் ஒப்பிட்டு வாக்குவாதம் செய்தது சர்ச்சையாக கிளம்பியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நடத்தை விதியை மீறிய அவருக்கு 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனது கருத்துக்காக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடமும், அந்த அணி வீரர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து கேப்ரியல் கூறியதாவது:-

    நான் பயன்படுத்தியது மோசமான வார்த்தை என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் இது. இருவரிடையே நடந்த வார்த்தை பரிமாற்றம் என்ன என்பதை விளக்க வேண்டியது எனது கடமை.

    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நான் பந்து வீச தயாரான போது என்னை உற்று பார்த்தார். இது உளவியல் சார்ந்த யுக்தியாக இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு இது வழக்கமானது தான். இதை அறிந்த நான் எனக்குள் இருந்த டென்ஷனை குறைத்துக் கொள்வதற்காக அவரை நோக்கி ‘என்னை பார்த்து ஏன் சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஆண்கள் என்றால் உங்களுக்கு இஷ்டமா?’ என்று கேட்டேன்.

    அதற்கு அவர், ‘இந்த சொல்லை ஒருவரை அவமதிப்பதற்காக பயன்படுத்தாதே. ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’ என்று பதில் அளித்தார்.

    அதற்கு நான் ‘அது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறினேன்.

    இந்த பிரச்சினைக்கு பிறகு நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். எங்களுக்குள் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால் இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஒரு அனுபவ பாடமாகும்.

    இவ்வாறு கேப்ரியல் கூறினார். #WIvENG #ShannonGabriel #JoeRoot
    ஜோ ரூட்டை பார்த்து நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா? என்று கேட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு நான்கு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். ஜோ ரூட்டும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியலும் மைதானத்தில் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.

    கேப்ரியல் வீசிய துள்ளியமான பந்து வீச்சில் இருந்து ஜோ ரூட் தப்பினார். பலமுறை இப்படி தப்பியதால் விரக்தியில் கேப்ரியல் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஆனால் ஜோ ரூட் புன்னகைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த கேப்ரியல்ஸ் ‘‘என்னை நோக்கி ஏன் சிரிக்கிறீர்கள்?. நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா?’’ என்றார்.

    அதற்கு ஜோ ரூட், ‘‘அதை அவமானப்படுத்தாதீர்கள். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், நீங்கள் என்னை நோக்கி சிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கேப்ரியல் பதில் அளித்துள்ளார்.



    கேப்ரியல் பேசிய ஏதும் மைக் ஸ்டம்பில் பதிவாகவில்லை. ஜோ ரூட் பேசியது மைக் ஸ்டம்பில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேப்ரியலுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேப்ரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படித்தான் இருவருக்குமிடையில் உரையாடல் நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.
    இலங்கைக்கு எதிராக சதம் அடித்த ஜோ ரூட்டை கங்குலி வெகுவாக பாராட்டினார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பார்வையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. #IPL2019
    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக டி20 போட்டியில் அதிக அளவில் விளையாடியது கிடையாது.

    இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜோ ரூட் 2018 ஐபிஎல் சீசனில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ஜோ ரூட் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

    தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜோ ரூட்டின் ஆட்டத்தை கங்குலி டுவிட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.

    அப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஜோ ரூட் மற்றும் ஜிண்டால் ஆகியோருக்கு ‘டேக்’ செய்திருந்தார். ஜிண்டால் சவுத்  வெஸ்ட் ஸ்போர்ட்ஸ்-தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ளது. மேலும், கங்குலி அவரின் ஆலோசகராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஜோ ரூட் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஏலத்தில் ஜோ ரூட்டின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து 278 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே (63), தனஞ்ஜெயா டி சில்வா (59), ரோஷென் சில்வா (85) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது.

    இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரு ஓவர் மட்டுமே இருந்ததால் ஜேக் லீச் தொடக்க வீரராக ரோரி பேர்ன்ஸ் உடன் களம் இறங்கினார்.

    நேற்றைய 2-வது நாளில் இங்கிலாந்து ரன்ஏதும் எடுக்கவில்லை. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லீச் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோரி பேர்ன்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ஜென்னிங்ஸ் 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 146 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (0), ஜோஸ் பட்லர் (34), மொயீன் அலி (10), சாம் குர்ரான் (0), அடில் ரஷித் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


    தனஞ்ஜெயா

    விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து 76 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. பென் போக்ஸ் 51 ரன்னுடனும், ஆண்டர்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து தற்போது வரை 278 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 22 ரன்கள் அடித்தால் 300 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
    இலங்கை லெவன் போர்டு லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். #SLvENG
    இங்கிலாந்து அணி இலங்கை சென்று விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வென்றுள்ள நிலையில், நவம்பர் 6-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இதற்கு முன் இங்கிலாந்து இரண்டு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இலங்கை போர்டு லெவன் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டம் கொழும்பில் நேற்று தொடங்கியது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்தின் பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை.

    இதனால் இலங்கை முதல்நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பர்ன்ஸ் 47 ரன்கள் சேர்த்தார். ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், டென்லி 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 117 பந்தில் 13 பவுண்டரிகளுடன் சதம் விளாசிய ஜோ ரூட் 100 ரன்னில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 31 ரன்கள், பட்லர் 60 ரன்கள் சேர்த்தனர். இரண்டு நாட்கள் கொண்ட ஆட்டம் என்பதால் போட்டி டிராவில் முடிகிறது. 2-வது பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி தம்புல்லாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இங்கிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் வெற்றித் தோல்வியின்றி முடிவிற்கு வந்தது.

    இந்நிலையில் 2-வது ஆட்டம் தம்புல்லாவில் இன்று பகல் ஆட்டமாக நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜோ ரூட் (71), மோர்கன் (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இலங்கை அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. குசால் பெரேரா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இலங்கை அணி 29 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.



    கனத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பெற்று டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போனது. ஆனால், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதிலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி என அறிவிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் 17-ந்தேதி பல்லேகலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட்டை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக பட்லரை நியமிக்க வேண்டும் என்று வார்னே தெரிவித்துள்ளார். #joeRoot
    ஜோ ரூட் 21 போட்டிகளில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவரின் சராசரி 51.04-ல் இருந்து 46.80 ஆக குறைந்துள்ளது. 14 டெஸ்ட் சதங்களில் மூன்று மட்டுமே கேப்டனாக இருந்தபோது வந்துள்ளது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேப்டன் பதவியை பெற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக அவரை பார்க்கலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வார்னே கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அரைசதத்தை சதமாக மாற்றுவதில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதேவேளையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அசத்துகிறார்கள்.



    ஜோ பட்லர் சிறந்த கேப்டனாக முடியும். அவருடன் நான் பணியாற்றியதை வைத்து கூறுகிறேன். அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். அவரால் இங்கிலாந்து அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும்.

    இங்கிலாந்து அணி ஜோ ரூட் அசைக்க முடியாத தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலையை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கக் கூடாது. ஜோஸ் பட்லர் போன்ற ஒருவரிடம் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும்’’ என்றார்.
    லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 331 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்கை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 46 ரன்னுடனும், ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.

    இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும், அலஸ்டைர் குக் 147 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.



    அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை.

    இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜடேஜா, விஹாரி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த விராட் கோலி, இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்பட்டது.

    இங்கிலாந்து கேப்டன் டாஸ் சுண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘ஹெட்’  என அழைத்தார். ஆனால் ‘ஹெட்’ விழ இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.



    இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐந்து போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளார். தொடரை இழப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். இன்று டாஸ் தோற்ற விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் டாஸ் வெல்ல வேண்டுமென்றால், ‘காய்’னின் இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்று பரிதாபமாக கூறினார்.
    ×