search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gabriel"

    ஜோ ரூட்டை பார்த்து நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா? என்று கேட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு நான்கு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். ஜோ ரூட்டும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியலும் மைதானத்தில் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.

    கேப்ரியல் வீசிய துள்ளியமான பந்து வீச்சில் இருந்து ஜோ ரூட் தப்பினார். பலமுறை இப்படி தப்பியதால் விரக்தியில் கேப்ரியல் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஆனால் ஜோ ரூட் புன்னகைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த கேப்ரியல்ஸ் ‘‘என்னை நோக்கி ஏன் சிரிக்கிறீர்கள்?. நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா?’’ என்றார்.

    அதற்கு ஜோ ரூட், ‘‘அதை அவமானப்படுத்தாதீர்கள். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், நீங்கள் என்னை நோக்கி சிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கேப்ரியல் பதில் அளித்துள்ளார்.



    கேப்ரியல் பேசிய ஏதும் மைக் ஸ்டம்பில் பதிவாகவில்லை. ஜோ ரூட் பேசியது மைக் ஸ்டம்பில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேப்ரியலுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேப்ரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படித்தான் இருவருக்குமிடையில் உரையாடல் நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.
    இலங்கைக்கு எதிரான கடைசி நாளில் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்குகியுள்ளது. #SLvWI
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் சண்டிமல் மட்டும் 119 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித் (61), டவ்ரிச் (55) ஆகியோரின் அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.



    47 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. குசால் மெண்டிஸ் (87), டிக்வெல்லா (62) ஆகியோரின் அரைசதங்களால் இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் 2.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 342 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஒட்டுமொத்தமாக இலங்கை 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 296 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.



    இன்றைய கடைசி நாளில் 90 ஓவர்கள் வீச வாய்ப்புள்ளது. இதற்குள் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டினால்  வெற்றி பெறும். தாக்குப்பிடித்து விளையாடினால் டிரா ஆகும்.
    ×