search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvSL"

    இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. #Chandimal
    இலங்கை அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கேப்டன் சண்டிமல் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதனால் மாற்றுப் பந்தை பயன்படுத்த நடுவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, அணி மானேஜர் அசாங்கா குருசிங்கா பீல்டிங் செய்ய மறுத்தனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேர ஆட்ட நேரம் பாதித்தது.



    இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சண்டிமல் அப்பீல் செய்திருந்தார். இந்த அப்பீல் விசாரணை முடிவில் மூன்று பேருக்கும் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சண்டிமல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் விளையாட முடியாது.
    பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குசால் பேரேரா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். #WIvSL
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. அப்போது இலங்கை வீரர் குசால் பெரேரா லாங்-ஆன் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் பறந்த சென்றது. இதை பிடிக்க முயன்ற குசால் பெரேரா பவுண்டரி லைனில் இருந்த விளம்பர பேனரில் விழுந்தார். இதனால் பலமாக அடிபட்டது. உடனே, ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



    இலங்கையின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவையுள்ள நிலையில் 5 விக்கெட் மட்டுமே கைவசம் உள்ளது. இதனால் குசால் பெரேரா களம் இறங்குவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு பயப்பட வேண்டிய நிலையில் காயம் ஏற்படவில்லை. உடனடியாக மைதானத்திற்கு திரும்பலாம். ஆனால், சற்று ஓய்வு என்ற அறிவிறுத்தப்பட்டுள்ளது. இன்று இலங்கை அணிக்காக கட்டாயம் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பெரேரா களம் இறங்குவார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டெஸ்டில் கைவசம் 5 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில் இலங்கைக்கு 63 ரனகள் தேவை என்பதால் பரபரப்பை அடைந்துள்ளது. #WIvSL
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. ஒரு கட்டத்தில் 53 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த கேப்டன் ஹோல்டர் 74 ரன்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 71 ரன்களும் அடித்ததால், 204 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் குமாரா 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கையும் ரன்குவிக்க திணறியது. ஜேசன் ஹோல்டர், கேப்ரியலின் அபார பந்து வீச்சால் 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் 42 ரன்கள் சேர்த்தார்.

    முதல் இன்னிங்சில் 50 ரன்கள் முன்னிலைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் விக்கெட் மளமளவென சரிந்தது. இதனால் 31.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 93 ரன்னில் சுருண்டது.

    இதனால் இலங்கையின் வெற்றிக்கு 144 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். மிகவும் எளிதான ஸ்கோர் என்ற எண்ணத்தில் இலஙகை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 3-வது நாள் கடைசி நேர ஆட்டத்தில் இலங்கை பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடித்து விளையாட முடியவில்லை. இதனால் இலங்கை அணியும் விக்கெட்டை இழந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்துள்ளது. பெரேரா 1 ரன்னுடனும், மெண்டிஸ் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    இலங்கை அணியின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவை. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டை வைத்துக் கொண்டு 63 ரன்கள் எடுப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலானதாக இருக்கும். ஒருவேளை 63 ரன்கள் எடுத்துவிட்டால் இலங்கை தொடரை 1-1 என சமன் செய்யும். அதேவேளையில் 5 விக்கெட்டுக்களை மளமளவென இழந்தால் வெஸ்ட் இண்டீஸ் 2-0 எனத் தொடரை கைப்பற்றும். இதனால் இன்றைய போட்டி பரபரப்பானதாக இருக்கும்.
    கடுமையான விதிமுறை மீறல் செய்த காரணத்திற்காக பெரிய தண்டனையை எதிர்நோக்கி இலங்கை கேப்டன் சண்டிமல் உள்ளார். #WIvSL #Chandimal
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.

    இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.

    சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்துள்ளார்.



    இந்நிலையில் 3-வது நாள் காலையில் ஒன்றரை மணி நேரம் களம் இறங்காதது ஐசிசியின் விதிமுறையை கடுமையாக மீறியதாக மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்துள்ளது. இவர் விசாரணை முடிவில் தண்டனை வழங்குவார்கள். இவர்கள் செய்த குற்றம் ஐசிசியின் லெவல் 3 அபாரதத்திற்குள் வருவதால், இரண்டு முதல் நான்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அல்லது நான்கில் இருந்து 8 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
    2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் சண்டிமல். #WIvSL #chandimal
    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்த டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் முடிவில் சண்டிமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.



    இந்நிலையில் இலங்கை கேப்டன் சண்டிமல் ஐசிசி எடுத்துள்ள தடைஉத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். சண்டிமல் மேல்முறையீட்டை விசாரிக்க ஐசிசி சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும். இவர் விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பு வழங்குவார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
    இலங்கைக்கு எதிரான கடைசி நாளில் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்குகியுள்ளது. #SLvWI
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் சண்டிமல் மட்டும் 119 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித் (61), டவ்ரிச் (55) ஆகியோரின் அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.



    47 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. குசால் மெண்டிஸ் (87), டிக்வெல்லா (62) ஆகியோரின் அரைசதங்களால் இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் 2.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 342 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஒட்டுமொத்தமாக இலங்கை 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 296 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.



    இன்றைய கடைசி நாளில் 90 ஓவர்கள் வீச வாய்ப்புள்ளது. இதற்குள் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டினால்  வெற்றி பெறும். தாக்குப்பிடித்து விளையாடினால் டிரா ஆகும்.
    பந்தை சேதப்புடுத்தியதாக புகார் கூறியதால் இலங்கை வீரர்கள் பீல்டிங் செய்ய மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #WIvSL
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐஸ்லேட்டில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 253 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    3-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன், இலங்கை வீரர்கள் அறைக்குச் சென்ற நடுவர்கள் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக புகார்  கூறினார்கள். அத்துடன் நேற்று பயன்படுத்திய பந்தை இலங்கை வீரர்கள் இன்று பயன்படுத்தக் கூடாது. வேறு பந்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

    இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் இலங்கை வீரர்கள் களம் இறங்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாக கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மற்றும் கள நடுவர்கள் மட்டுமே மைதானத்தில் இருந்தனர்.



    பின்னர் போட்டி நடுவர் இலங்கை கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பேச்சவார்த்தை நடத்தினார்கள். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இலங்கை வீரர்கள் பந்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். அத்துடன் வழக்கை எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதமாக ஐந்து ரன்கள் கொடுக்கப்பட்டு, பின்னர் ஆட்டம் தொடங்கியது.
    ×