search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோரூட்"

    • இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.
    • ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என வாசிங் ஜாபர் கூறினார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 378 ரன்களை இங்கிலாந்து அணி சேசிங் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜானி பேர்ஸ்டோவ் - ஜோரூட் சதம் அடித்து அசத்தினர்.

    இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது. ஜோரூட் -ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஃபார்மில் இருந்து பேட்டிங்கை மிகவும் எளிதாக்கியுள்ளனர். உறுதியான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் ஒரு முன்னாள் வீரர் இருவரையும் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் தொடக்கக்காரரான வாசிங் ஜாபர் கூறியதாவது:- இரண்டு பேருக்கும் போதிய பாராட்டு இல்லை. ஜோரூட் இப்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோலி தனது 27-வது சதத்தை பதிவு செய்த போது ரூட் 16 சதங்களை மட்டுமே அடித்திருந்தார்.
    • ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளனர்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

    இதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து இந்திய அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த தொடரின் மூலம் ஜோரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோரூட் 737 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் ஜோரூட் 4 சதங்களை விளாசியுள்ளார்.

    5-வது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜோரூட் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளனர். கோலி தனது 27-வது சதத்தை பதிவு செய்த போது ரூட் 16 சதங்களை மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணிக்கு எதிராக 9 சதங்களை பதிவு செய்த ரூட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் (8), ரிக்கி பாண்டிங் (8), ரிச்சர்ட்ஸ்(8) மற்றும் கேரி சோபர்ஸ் (8) ஆகியோரின் சாதனையை ஜோரூட் தகர்த்துள்ளார்.

    முன்னாள் இங்கிலாந்து கேப்டன் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நம்பமுடியாத அளவில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டில் ரூட் 11 சதங்கள் உட்பட 2,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த மாதம் ரூட் டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்கள் கடந்தார்.

    • விராட்கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோரை விட ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினரான சபாகரீம் தெரிவித்துள்ளார்.
    • எந்த ஆடுகளத்தில் விளையாடினாலும் ஜோரூட் தனித்துவம் பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோரூட். டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதல் போட்டியில் அவர் சதம் அடித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற முடிந்தது.

    31 வயதான ஜோரூட் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.

    ஜோரூட் 118 டெஸ்டில் 10,015 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.57 ஆகும். 26 சதமும், 53 அரை சதமும் அடித்துள்ளார்.

    லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தை வெற்றி பெற ஜோரூட்டின் ஆட்டத்தை கங்குலி, மார்க்டெய்லர் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் பாராட்டி இருந்தனர். டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று டெய்லர் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் விராட்கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோரை விட ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினரான சபாகரீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜோரூட் வெகுதூரம் முன்னேறி சென்று இருக்கிறார். இங்கிலாந்தின் பேட்டிங்கை பார்த்தால் அவரது பெயர் மட்டுமே மீண்டும் மீண்டும் வருகிறது. ஜோரூட்டுக்கு மறுமுனையில் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை.

    இந்திய அணியை சொல்ல வேண்டுமானால் விராட்கோலியுடன் லோகேஷ், ராகுல், ரோகித் சர்மா, ரிஷப்பண்ட் போன்றோரில் அவருக்கு இணையாக ஆடி ஆதரவு கொடுத்துள்ளார்கள். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இதே நிலைமையில்தான் இருக்கிறது.

    எந்த ஆடுகளத்தில் விளையாடினாலும் ஜோரூட் தனித்துவம் பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற 3 பேட்ஸ்மேன்களை (விராட்கோலி, ஸ்டீவ்சுமித், வில்லியம்சன்) விட அவர் பின்தங்கி இருந்தார். தற்போது அவர்கள் அனை வருக்கும் மேல் இருக்கிறார்.

    கடந்த 2 ஆண்டுகளாக ஜோரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    4-வது இன்னிங்சில் ஜோரூட் சதம் அடித்தார். இது எளிதல்ல. போல்ட், ஜேமிசன் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

    தொழில்நுட்ப ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் வலிமையானவர் என்பதை இந்த ஆட்டம் மூலம் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு சபாகரீம் கூறியுள்ளார்.

    • தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும்.

    மெல்போர்ன்:

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோரூட் முதல் போட்டியில் சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கிடைத்தது. அதோடு ஜோரூட் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.

    இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (15,921) சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜோரூட் மிகவும் பிரமாதமாக ஆடி வருகிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும். உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவரால் 15,000 ரன்னுக்கு மேல் எடுக்க இயலும்.

    இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.

    ×