search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeep"

    • ஜீப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டங்களை ஜீப் நிறுவனம் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    ஜீப் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜீப் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வை ஜீப் நிறுவனம் 4xe தினம் என அழைக்கிறது.

    முதல் எலெக்ட்ரிக் காரை இதுவரை அறிமுகம் செய்யாத நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் இ ஹைப்ரிட் மற்றும் 4xe பிராண்டுகளின் கீழ் விற்பனையாகி வருகின்றன.


    முன்னதாக ஜீப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் ரெண்டர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இது காம்பஸ் மற்றும ரெனகேடு போன்று காம்பேக்ட் எஸ்யுவி-யாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார்களின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் 2023 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஸ்டெலாண்டிஸ் STLA பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதே பிளாட்பார்மில் இந்த நிறுவனத்தின் மற்ற கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருகின்றன.

    முதல் முறையாக 2021 மார்ச் மாத வாக்கில் ஜீப் நிறுவனம் மேக்னெடோ கான்செப்ட் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடலில் 285 பிஎஸ் பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இ மோட்டார், 70 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டு இருந்தது.

    • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 24 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடலை விற்பனை மையங்கள் அல்லது ஜீப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


    இந்த காரின் வெளிப்புறம் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், கிரானைட் க்ரிஸ்டல் பினிஷிங், நியூட்ரல் கிரே நிறத்தால் ஆன ORVM, பாடி கலர் ஃபெண்டர் ஃபிளேர்கள், அக்செண்ட் நிற ரூஃப் ரெயில்கள், முன்புற கிரில் ரிங்குகள் நியூட்ரல் கிரே நிறம் கொண்டுள்ளன. இவை அனைத்தும் காரின் தோற்றத்தில் மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன. இதனால் கார் முன்பை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஐந்தாவது ஆனிவர்சரி பேட்ஜிங்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் லெதர் இருக்கை, பிளாக் ஹெட்லைனர்களில் டக்ஸ்டன் அக்செண்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், பியானோ பிளாக் மற்றும் அனோடைஸ்டு கன் மெட்டல் இண்டீரியர் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல் 162 ஹெச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 ஹெச்பி பவர், 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டிஜெட் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் காரை 4x4 வெர்ஷனிலும் பெற முடியும். எனினும், இந்த வசதி டீசல் என்ஜினில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

    கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு DCT, டீசல் என்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் காம்பஸ் மாடல் காரை 2017 ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • கடந்த ஆண்டு ஜீப் காம்பஸ் மாடல் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை கொண்டாட ஜீப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் முதல் மாடலாக ஜீப் காம்பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் 2017 வாக்கில் துவங்கியது.

    விற்பனை துவங்கியதில் இருந்தே ஜீப் காம்பஸ் மாடல் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு இந்த காருக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் முன் பல முறை இந்த காரின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை ஜீப் இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது. இதன் மூலம் கார் மாடலை உயிர்ப்புடன் வைத்திருந்தது.


    இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலின் நைட் ஈகிள் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது தற்போதைய காம்பஸ் மாடலின் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் கிளாஸ் பிளாக் நிற கிரில், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள் மற்றும் ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    இதன் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை

    ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 30). இவர் தனது பெரியப்பா பழனிச்சாமி (72) என்பவருடன் கிணத்துக்கடவு அருகே உள்ள குப்பணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் கார் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயங்களுடன் இருந்த ராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் பெரியசாமி மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2019 ஜீப் ராங்கலர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இது சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    2019 ஜீப் ராங்லர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. முன்னதாக அன்லிமிட்டெட் மற்றும் சஹாரா ட்ரிம்கள் லீக் ஆகியிருந்த நிலையில், தற்சமயம் ரூபிகான் வேரியன்ட் லீக் ஆகியுள்ளது.

    நான்காம் தலைமுறை ஜீப் ராங்லர் ரூபிகான் மாடலில் மூன்று கதவுகள் காணப்படுகின்றன. ஜீப் வாகனம் ஆஃப்-ரோடிங் வசதிகளுக்கு பிரபலமானவையாக இருக்கின்றன. அந்த வரிசையில் ராங்கலர் மாடல் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. மூன்று கதவுகள் கொண்ட ரூபிகான் மாடல் ARAI ஸ்டிக்கர்களுடன் காணப்பட்டிருப்பதே இது சோதனை செய்யப்படுவதை உறுதி செய்திருக்கிறது.



    புதிய ஜீப் மாடலின் உள்புறம் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஜீப் ராங்லர் ரூபிகான் மாடலில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 259 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 285 பி.ஹெச்.பி. பவர், 325 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வரும் என தெரிகிறது.

    புதிய ஜீப் ராங்லர் விலை தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய மாடல்கள் ரூ.58.74 லட்சம் முதல் ரூ.67.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: ZigWheels
    ஜீப் இந்தியாவின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Jeep



    ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. டிரெயில்ஹாக் வேரியண்ட் ஜீப் காம்பஸ் காரின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஜீப் பிரியர்கள் மற்றும் ஆஃப்-ரோடர்களுக்கு டிரெயில்ஹாக் வேரியண்ட் பிடித்தமான காராக இருக்கும். இந்தியாவில் ஜீப் காம்பஸ் கார் 2017 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அறிமுகமானது முதல் ஜீப் காம்பஸ் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

    தொடர்ந்து இந்த காரின் விற்பனையை அதிகரிக்க ஜீப் இந்தியா புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜீப் காம்பஸ் டிரெயிட்ஹாக் வேரியண்ட் பூனேவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய ஜீப் கார் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பது தெளிவாக கவனிக்க முடிகிறது.



    ஜீப் காம்பஸ் மற்ற வேரிண்ட்களை போன்றே டிரெயில்ஹாக் வேரியண்ட் காட்சியளிக்கிறது. இதனை வித்தியாசப்படுத்தும் ஒரே அம்சமாக இதன் வீல்பேஸ் உயரம் மற்றும் டிரெயில்ஹாக் பேட்ஜ் உள்ளிட்டவற்றை கூறலாம். சோதனை செய்யப்படும் டிரெயில்ஹாக் மாடலில் டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் புதிய காரின் பம்ப்பர் மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது. பின்புற பம்ப்பரில் டோ செய்வதற்கென ஹூக் காணப்படுகிறது. சோதனையில் சிக்கிய டிரெயில்ஹாக் எஸ்.யு.வி. டூயல்-டோன் வேரியண்ட் ஆகும். இதன் உள்புறங்கள் காம்பஸ் காரின் மற்ற வேரியண்ட்களை போன்று காட்சியளிக்கிறது. 

    ஜீப் காம்பல் டிரெயில்ஹாக் பெரிய MID மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்டில் இருந்து எடுக்கப்படுகிறது. இதன் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    புதிய டிரெயில்ஹாக் கார் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரெயில்ஹாக் மாடலில் இந்த என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

    புகைப்படம் நன்றி: Zigwheels
    ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jeepcompass



    ஜீப் இந்தியா நிறுவனம் புதிய காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய பிளாக் பேக் எடிஷன் டாப் என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. 

    பிளாக் பேக் எடிஷனில் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனத்திற்கு காம்பஸ் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் விற்பனையை மேலும் அதிகப்படுத்த இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    வெளிப்புறத்தில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷனில் பிளாக் நிற ORVMகள், அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலில் டாப்-என்ட் வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரையும் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.



    வோக்கல் மைன், மினிமல் கிரே மற்றும் மக்னீசியோ கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் உள்புறம் முற்றிலும் புதிய கருப்பு நிற தீம் கொண்டுள்ளது. இது ஜீப் காம்பஸ் ஸ்டான்டர்டு வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் டூயல் டோன் தீமிற்கு மாற்றாக அமைந்துள்ளது. இதன் கேபினை பொருத்த வரை ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சென்ட்டர் கன்சோல் மற்றும் கதவுகளில் க்ரோம் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பிளாக் பேக் எடிஷனில் 2-லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு ஸ்டான்டர்டு மாடலை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் விலை ரூ.20.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்ப்பூர் பகுதியில் பிரசவ வலியுடன் ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு ஊழியர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் சென்ற ஜீப்பிலேயே குழந்தை பெற்றார். #chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டம், பகிச்சா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கடந்த 20-ம் தேதி பிரசவ வலியுடன் பெண் ஒருவரை அனுமதிக்க உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை சிகிச்சைக்காக அனுமதிக்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால், வேறு வழியின்றி அவர்கள் வந்த ஜீப்பிலேயே அந்த பெண்ணுக்கு அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு அந்த பெண்ணையும் குழந்தையையும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சிகிச்சைக்காக அந்த ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.

    ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #chhattisgarh
    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Accident #MadhyaPradesh
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் இன்று அதிகாலை டிராக்டர் ஒன்று ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளாதாகவும், மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிகாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Accident #MadhyaPradesh
    காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப் தார் மாடலை அருங்காட்சியகத்தில் வைக்க மஹேந்திரா முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மஹேந்திரா நிறுவனத்தின் தார் ஆஃப் ரோடர் மாடலுக்கு காலா திரைப்படம் சிறப்பான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில், காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் காரினை மஹேந்திரா நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. 

    இதற்கென ரஜினிகாந்த் பயன்படுத்திய காரினை மஹேந்திரா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனை ஆனந்த் மஹேந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினி மஹேந்திரா தார் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தினசரி நாளேடுகளில் விளம்பரம் செய்துள்ளது.



    மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் ஜீப் DI மற்றும் CRDe என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் DI வேரியன்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் என பொருள்படுகிறது, இந்த மாடல் ஊரகம் மற்றும் ஊராட்சி சார்ந்த நகர பகுதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதனை மக்கள் பயன்பாடு, விவசாய பணிகள் மற்றும் பொது பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றதாக இருக்கிறது.

    தார் ஆஃப் ரோடர் DI வேரியன்ட் 8 பேர் அமரக்கூடியதாகும். இந்த ஜீப் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் M2DICR டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இது 63 பிஹெச்பி பவர், 180 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதில் பவர் ஸ்டீரிங் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    மஹேந்திரா தார் DI மாடலில் ரியர் வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் அனைத்து வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.



    தார் CRDe வேரியன்ட் நகரவாசிகளுக்கு ஏற்ற வகையில், கிளாசிக் தோற்றம் கொண்ட ஜீப் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையிலான இன்டீரியர், சீட் மற்றும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கபக்பட்டுள்ளது. இந்த மாடலில் 4-வீல் டிரைவ் ஸ்டேன்டர்டு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    இத்துடன் CRDe மாடலில் ஏசி வசதி, பவர் ஸ்டீரிங் உள்ளிட்டவை ஸ்டேன்டர்டு ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது இதன் 2.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் 105 பிஹெச்பி பவர், 247 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடலிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8-பேர் அமரக்கூடிய சீட்டிங், DI வேரியன்ட்-ஐ விட சிறப்பான இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. 

    தலைசிறந்த அம்சங்களை போன்றே மஹேந்திரா தார் CRDe வேரியன்ட் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×