என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jeep"
- ஜீப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
- எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டங்களை ஜீப் நிறுவனம் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.
ஜீப் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜீப் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வை ஜீப் நிறுவனம் 4xe தினம் என அழைக்கிறது.
முதல் எலெக்ட்ரிக் காரை இதுவரை அறிமுகம் செய்யாத நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் இ ஹைப்ரிட் மற்றும் 4xe பிராண்டுகளின் கீழ் விற்பனையாகி வருகின்றன.
முன்னதாக ஜீப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் ரெண்டர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இது காம்பஸ் மற்றும ரெனகேடு போன்று காம்பேக்ட் எஸ்யுவி-யாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார்களின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2023 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஸ்டெலாண்டிஸ் STLA பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதே பிளாட்பார்மில் இந்த நிறுவனத்தின் மற்ற கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருகின்றன.
முதல் முறையாக 2021 மார்ச் மாத வாக்கில் ஜீப் நிறுவனம் மேக்னெடோ கான்செப்ட் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடலில் 285 பிஎஸ் பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இ மோட்டார், 70 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டு இருந்தது.
- ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 24 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடலை விற்பனை மையங்கள் அல்லது ஜீப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த காரின் வெளிப்புறம் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், கிரானைட் க்ரிஸ்டல் பினிஷிங், நியூட்ரல் கிரே நிறத்தால் ஆன ORVM, பாடி கலர் ஃபெண்டர் ஃபிளேர்கள், அக்செண்ட் நிற ரூஃப் ரெயில்கள், முன்புற கிரில் ரிங்குகள் நியூட்ரல் கிரே நிறம் கொண்டுள்ளன. இவை அனைத்தும் காரின் தோற்றத்தில் மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன. இதனால் கார் முன்பை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஐந்தாவது ஆனிவர்சரி பேட்ஜிங்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் லெதர் இருக்கை, பிளாக் ஹெட்லைனர்களில் டக்ஸ்டன் அக்செண்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், பியானோ பிளாக் மற்றும் அனோடைஸ்டு கன் மெட்டல் இண்டீரியர் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல் 162 ஹெச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 ஹெச்பி பவர், 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டிஜெட் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் காரை 4x4 வெர்ஷனிலும் பெற முடியும். எனினும், இந்த வசதி டீசல் என்ஜினில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு DCT, டீசல் என்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் காம்பஸ் மாடல் காரை 2017 ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- கடந்த ஆண்டு ஜீப் காம்பஸ் மாடல் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை கொண்டாட ஜீப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் முதல் மாடலாக ஜீப் காம்பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் 2017 வாக்கில் துவங்கியது.
விற்பனை துவங்கியதில் இருந்தே ஜீப் காம்பஸ் மாடல் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு இந்த காருக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் முன் பல முறை இந்த காரின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை ஜீப் இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது. இதன் மூலம் கார் மாடலை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலின் நைட் ஈகிள் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது தற்போதைய காம்பஸ் மாடலின் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் கிளாஸ் பிளாக் நிற கிரில், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள் மற்றும் ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இதன் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 30). இவர் தனது பெரியப்பா பழனிச்சாமி (72) என்பவருடன் கிணத்துக்கடவு அருகே உள்ள குப்பணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் கார் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயங்களுடன் இருந்த ராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் பெரியசாமி மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டம், பகிச்சா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கடந்த 20-ம் தேதி பிரசவ வலியுடன் பெண் ஒருவரை அனுமதிக்க உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை சிகிச்சைக்காக அனுமதிக்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், வேறு வழியின்றி அவர்கள் வந்த ஜீப்பிலேயே அந்த பெண்ணுக்கு அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு அந்த பெண்ணையும் குழந்தையையும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சிகிச்சைக்காக அந்த ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #chhattisgarh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்