என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை அருகே கார் மீது ஜீப் மோதல் - முதியவர் பலி
- குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 30). இவர் தனது பெரியப்பா பழனிச்சாமி (72) என்பவருடன் கிணத்துக்கடவு அருகே உள்ள குப்பணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் கார் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயங்களுடன் இருந்த ராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் பெரியசாமி மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்