search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசத்தில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
    X

    மத்திய பிரதேசத்தில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Accident #MadhyaPradesh
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் இன்று அதிகாலை டிராக்டர் ஒன்று ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளாதாகவும், மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிகாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Accident #MadhyaPradesh
    Next Story
    ×