search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasprit Bumrah"

    • 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
    • இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்தது.

    ஆட்ட நாயகன் விருது முகமது சிராஜுக்கும், தொடர் நாயகன் விருது பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் முடிந்துள்ளது.

    இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா வெற்றி பெற 79 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா.
    • இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 10 ரன்னும், விராட் கோலி 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 1-1 என சமனிலையில் முடித்தது.

    • தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.
    • எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் காலையில் இருந்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.

    எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். சில ரசிகர்கள் உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாம்பியன் டிராபி இருக்கும் என்பதை தான் இப்படி கூறுகிறார் என தெரிவித்து வந்தனர்.

    இந்த குழப்பம் முடிவுக்கு வருவதற்குள் மேலும் ஒரு குழப்பத்தை பும்ரா ஏற்படுத்தி உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை unfollow செய்துள்ளார். இதற்காக தான் அவர் அப்படி ஒரு ஸ்டோரியை வைத்துள்ளாரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    மேலும் அவர் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியும், கேமரூன் கிரினை பெங்களூர் அணியும் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • நேற்று மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடக்கிறது. ராகுலும், கோலியும் தொடர்ந்து ஆடுவார்கள்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்த போது மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

    விராட்கோலி 8 ரன்னுட னும், கே.எல்.ராகுல் 17 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். சுப்மன்கில் 52 பந்தில் 58 ரன்னும் (10 பவுண்டரி), கேப்டன் ரோகித் சர்மா 49 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடக்கிறது. ராகுலும், கோலியும் தொடர்ந்து ஆடுவார்கள்.

    மழையால் போட்டி பாதிக்கப்பட்ட போது இந்திய வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ராவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி வாழ்த்தினார். பும்ராவுக்கு கடந்த 4-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    இதையொட்டி பும்ரா அருகே சென்று அப்ரிடி அவரிடம் பிறந்த குழந்தைக்கு பரிசு ஒன்றை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் கைக் குலுக்கி கொண்டனர்.

    இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    • டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் டி20 போட்டி நேற்று இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி முதலில் சொதப்பினாலும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கெளரவமான ரன்களை எடுத்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் கேப்டன் பும்ரா, பிரதிஷ் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் இந்திய அணி எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே, ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக சேவாக், டோனி, ரெய்னா, ரகானே, விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், பாண்ட்யா ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த சாதனையை பும்ரா மட்டுமே நிகழ்த்தியுள்ளார்.

    • அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

    இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.கே. வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சி.எஸ்.கே. அணியின் ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

    அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் விவரம் வருமாறு:

    ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

    • முழு உடல் தகுதியுடன் இருக்கும் பும்ரா வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து புறப்படும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதே போன்று பிரசித் கிருஷ்ணாவும் 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. இதையடுத்து நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அன்று மருத்துவ அறிக்கையில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பயிற்சி விளையாட்டு போட்டிகளில் விளையாடுவார்கள். அந்த போட்டிகளை தேசிய கிரிக்கெட் அகாடமியே ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று பயிற்சி போட்டி நடந்தது.

    இதில் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை பேட்ஸ்மேனான அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு எதிராக பந்து வீசி அவரது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கடந்த 2 வாரங்களாக பெங்களூருக்கு அருகில் உள்ள ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ வளாகத்தில் மும்பை சீனியர் அணி தங்கியுள்ளது. அவர்களுடன் நடந்த போட்டியில் பும்ரா 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

    இதன் மூலமாக தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கும் பும்ரா வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து புறப்படும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போன்று பிரசித் கிருஷ்ணாவும் 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். 

    • உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும்.
    • இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு முதுகில் காயம் அடைந்தார். முதுகில் அழுத்தத்தினால் எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த மார்ச் மாதம் ஆபரேசன் செய்து கொண்டார்.

    அதன்பிறகு காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை பும்ரா மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்தது.

    இதனால் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் பும்ரா குறித்து ரோகித் சர்மா கூறும்போது அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பும்ரா விளையாடுவாரா? என்பது தெரியவில்லை என்றார்.

    இந்த நிலையில் அயர்லாந்து தொடரில் பும்ரா விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். இதனால் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார்" என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, "உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும். இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்" என்றார்.

    வெஸ்ட்இண்டீஸ் தொடர் ஆகஸ்ட் 13-ந்தேதி முடிவடைகிறது. அதன்பிறகு இந்திய அணி அயர்லாந்து சென்று மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23-ந்தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது.

    பும்ரா கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடினார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகுகிறது.

    பும்ராவுடன் காயம் அடைந்த கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    • உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்.
    • தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் பும்ரா குறித்து பேசி வருகிறோம்.

    பார்படாஸ்:

    ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பார்படாஸில் தொடங்குகிறது.

    இந்நிலையில் பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். அவர் மோசமான காயத்திலிருந்து மீண்டுள்ளார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர் அயர்லாந்திற்கு செல்வாரா என்பது எனக்கு தெரியாது. அவர் விளையாடினால் அது நல்லது.

    உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம். ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பும் போது போட்டி சார்ந்து சில விஷயங்கள் முக்கியம். அதை அவர் விஷயத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் இது குறித்து பேசி வருகிறோம். இப்போதைக்கு அவர் குறித்து வரும் தகவல் அனைத்தும் பாசிட்டிவாக உள்ளது.

    என ரோகித் கூறினார்.

    • பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
    • கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, தான் பயிற்சி மேற்கொள்ளும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காயம் காரணமாக சுமார் ஓராண்டு காலமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல்நலம் குணமாகி அவர் மீண்டு வருகிறார். இந்த சூழலில் அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்ற வேளையில் களத்தில் பயிற்சி மேற்கொள்ளும் படத்தை பும்ரா வெளியிட்டுள்ளார்.

    'கம்மிங் ஹோம்' என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து பயிற்சி மேற்கொள்வது போன்ற படங்களை அவர் வெளியிட்டுள்ளார். வரும் அக்டோபரில் இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அவர் விளையாடுவது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்.

    29 வயதான பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

    • ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை.
    • 16-வது ஐபிஎல் சீசனில் இருந்தும் அவர் விலகினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் முதுகுத் தண்டுவடப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை. 16-வது ஐபிஎல் சீசனில் இருந்தும் அவர் விலகினார்.

    பி.சி.சி.ஐ., மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூஸிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த பும்ரா, சமீபத்தில் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் தற்போது பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா, விரைவில் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளார்.


    மேலும் முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் பும்ரா அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×