search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பை இந்தியன்ஸை UNFOLLOW செய்த பும்ரா- சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தி
    X

    மும்பை இந்தியன்ஸை UNFOLLOW செய்த பும்ரா- சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தி

    • பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.
    • எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் காலையில் இருந்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.

    எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். சில ரசிகர்கள் உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாம்பியன் டிராபி இருக்கும் என்பதை தான் இப்படி கூறுகிறார் என தெரிவித்து வந்தனர்.

    இந்த குழப்பம் முடிவுக்கு வருவதற்குள் மேலும் ஒரு குழப்பத்தை பும்ரா ஏற்படுத்தி உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை unfollow செய்துள்ளார். இதற்காக தான் அவர் அப்படி ஒரு ஸ்டோரியை வைத்துள்ளாரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    மேலும் அவர் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியும், கேமரூன் கிரினை பெங்களூர் அணியும் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×