என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அயர்லாந்து போட்டியில் பும்ரா விளையாடுவார்- இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்
- உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும்.
- இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு முதுகில் காயம் அடைந்தார். முதுகில் அழுத்தத்தினால் எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த மார்ச் மாதம் ஆபரேசன் செய்து கொண்டார்.
அதன்பிறகு காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை பும்ரா மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்தது.
இதனால் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் பும்ரா குறித்து ரோகித் சர்மா கூறும்போது அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பும்ரா விளையாடுவாரா? என்பது தெரியவில்லை என்றார்.
இந்த நிலையில் அயர்லாந்து தொடரில் பும்ரா விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். இதனால் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார்" என்றார்.
மேலும் அவர் கூறும் போது, "உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும். இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்" என்றார்.
வெஸ்ட்இண்டீஸ் தொடர் ஆகஸ்ட் 13-ந்தேதி முடிவடைகிறது. அதன்பிறகு இந்திய அணி அயர்லாந்து சென்று மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23-ந்தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது.
பும்ரா கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடினார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகுகிறது.
பும்ராவுடன் காயம் அடைந்த கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சி பெற்று வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்