search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "instruction"

    • பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டன.
    • 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், கோடீஸ்வரன், பாலமுருகன், சிரஞ்சீவி, ரகுநாத் ஆகியோர் உடுமலையில் கல்பனா ரோடு, பழனி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் பேக்கரிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்த பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் கெட்டுப்போன சாயம் ஏற்றப்பட்ட 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட ஒரு உணவகம் ,இரண்டு பேக்கரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு பயோடீசல் தயார் செய்வதற்காக உரிய விலைக்கு வழங்க வேண்டும்.

    சமையல் எண்ணெயை, சில்லறை விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பில் புத்தகத்தில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அச்சிட்ட பேப்பரை உணவுகளை மடித்து கொடுக்கும்போது சூடான உணவுப் பொருளில் அதில் உள்ள கெமிக்கல் கலந்து வயிறு தொடர்புடைய பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதே பிளாஸ்டிக் மூலப்பொருள் உருகி மனித உடலில் கலந்து கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளன. எனவே அவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தனர்.

    • உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா.
    • யானைகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

    திருப்பூர் :

    சூழலியல் கல்வியின் மற்றொரு அங்கமான வனம், அதுசார்ந்த விலங்கினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டுபேசினார். அவர் பேசுகையில், உலகில், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா. நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினமான யானைகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

    தினமும், பல கி.மீ., தூரம் பயணிக்கும் யானைகள், பல்வேறு மரங்களின் இழை, தழைகளை உண்பதன் மூலம் வெளியேற்றும் சாணம் மூலம், மரம், செடி, கொடிகளை வளரச் செய்து வன வளத்தை பெருக்குகிறது. இந்த உயிரினத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. அரசியலமைப்பு சட்டப்படி பொறுப்பும் கூட என்றார். பொருளியல் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட, 'களிறாற்றுப்படை' என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டது.யானைகள் 50 முதல் 70 ஆண்டு வரை வாழும். பெண் யானைகளின் கர்ப்ப காலம் 24 மாதம். மனிதர்களின் குரலை அடையாளம் காணும் ஆற்றல், நினைவாற்றல் யானைகளுக்கு உண்டு. கேட்பதிலும், மனிதர்களை போன்றே உணர்ச்சி வசப்படக்கூடியது.

    தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுகின்றன. மின் வேலியில் சிக்கியும் பலியாகின்றன. வனப்பரப்பு குறைந்ததால் பட்டினி சாவுகளை எதிர்கொள்கின்றன. 3 நிமிடத்திற்கு ஒரு வன விலங்கு வேட்டையாடப்படுகிறது என்ற பட்டியலில் யானைகளும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2017ன் கணக்கெடுப்புபடி இந்தியாவில் 29 ஆயிரத்து 864 யானைகள் உள்ளன. ஒரு யானை தினமும் 300 முதல் 500 விதைகளை தன் சாணத்தின் மூலம் விதைக்கிறது. ஓராண்டுக்கு 36 ஆயிரத்து 500 மரங்கள் வளர மறைமுகமாக உதவுகின்றன. அழியும் பேருயிர்களை காப்பது நம் வளங்களையும், வருங்காலத்தையும் காப்பதற்கு சமம்.இவ்வாறு அந்த ஆவணப்படத்தில் அழுத்தமாக சில புள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  

    • உணவுப் பொருட்கள் சரியான அளவில் வழங்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பொதுவிநியோகம் திட்டம் குறித்து காலாண்டு கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொதுவிநியோகம் திட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோ ர் அமைப்புகளுடனான 2-வது காலாண்டு கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகம் திட்டம் குறித்த புகார்களை 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி வழியே புகார் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும்,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகள் குறித்தும், நடப்பு காலாண்டில் வழங்கப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளை இரண்டாக பிரித்து புதிய பகுதிநேர அங்காடி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விபரங்கள், விலைப் பட்டியல், அங்காடி வேலை நேரம் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அலைபேசி எண்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கேட்டறிந்தார்.

    அதனைத் தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் நடைபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான 2வது காலாண்டு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உணவுப் பொருட்களை சரியான அளவிலும், தரத்திலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், துணைப் பதிவாளர் (பொ) அப்துல் சலீம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது.
    • மூன்றாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளி வழங்குகிறது. கொரோனா கடும் தொற்று அலைகளுக்கிடையே, தொழிலாளருக்கு பணிவாய்ப்பையும் மறுக்காமல் பின்னலாடை நிறுவனங்கள் வழங்கின. தற்போதைய மந்தமான வர்த்தகச்சூழலிலும் நெருக்கடியான தருணத்திலும்கூட, தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு தொடர்கிறது.

    தற்போது கொரோனா பரவல் உள்ள நிலையில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவதோடு, முடிந்தவரை சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது.எனவே தொற்று பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களின் நிர்வாகங்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கும், திருப்பூரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

    முடிந்தவரை பொதுமக்களே, தங்களைத் தற்காத்துக்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும். தொழில்துறையினரும், தொழிற்சாலைகளில், தொற்று தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.தொழிலாளருக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்ட இருக்க வேண்டும்.வணிக மையங்களிலும், விழாக்களிலும் கூட்ட நெரிசலை சிறிது நாட்களுக்கு தவிர்ப்பதே நல்லது.பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், அபராதம் விதித்தபின் தான் முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய சூழலை பொதுமக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் நில்லாமல், முன்னெச்சரிக்கையாக மூன்றாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வமும், அக்கறையும் குறைவாக இருக்கிறது.வருமுன் காப்பதுதான் சிறந்தது. இதை உணர்ந்தால், ஒவ்வொருவரும் தாங்களாக முன்வந்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வர். தொற்றில்லா சூழலை உருவாக்குவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டிய தருணம் இது. எனவே கொரோனா தடுப்பு வழிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.  

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிசு மரணங்களை டாக்டர்கள் தடுத்திட வேண்டும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
    • மார்ச் 2022 முதல் மே 2022 வரை உள்ள மாதங்களில் நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் 1 மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிசு மரணம்மற்றும் மகப்பேறு மரணம் தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பிரசவங்கள் நடைபெறுகிறது. அவ்வாறு மார்ச் 2022 முதல் மே 2022 வரை உள்ள மாதங்களில் நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் 1 மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.சிசு மரணம் நடைபெற்ற சம்மந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிசு மரணம் குறித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர். இவ்வாய்வறிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் பிரசவத்தின்போது சிசு மரணம் ஏற்படாதவாறு மருத்துவர்கள் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி கவனமுடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சிசு மரணம் தடுத்திட பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்புகளை மருத்துவர்கள் மற்றும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டும்.மகப்பேறு மருத்துவம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் தரமாகவும், சிறப்பாகவும், இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகப்பேறுகளுக்கு அரசு மருத்துவமனைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் கருக்கலைப்புகள் சட்டப்பூர்வமற்ற இடங்களில் மேற்கொள்ளாமல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவரின் உரிய ஆலோசனையின்படி, மேற்கொள்ளவும், அரசின் விதிமுறைகளை மீறி கருக்கலைப்புகளில் ஈடுபடும் மருந்தகங்கள் தனியார் மருத்துவமனைகள் மீதுசட்டப்பூர்வமான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரணம் முற்றிலும் தவிர்க்கப்படுவதற்கு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர்கள் கர்ப்பிணி பெண்கள்மீது தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.மகப்பேற்றிற்கு பின் பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்படாதவாறு மருத்துவர்கள் சிறப்பாக மருத்துவப்பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பூங்கொடி, அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    • பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பேரங்காடி கட்டுமான பணிகளை மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலா தகவல் மையம், ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம் ஆகியவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் பேரங்காடி கட்டுமான பணிகள், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.44.20 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பெரியார் பேருந்துநிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணிகள், அருகில் உள்ள பயணிகள் சுற்றுலா தகவல் மையத்தில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள ஜான்சி ராணி பூங்கா வணிக வளாகம் மையம், குன்னத்தூர் சத்திரம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆணையாளர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலருக்கு உத்தர விட்டார்.

    முன்னதாக ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கர்டர்பாலம் பகுதியில் உள்ள கழிவு நீரேற்றுநிலையம், மேலப்பொன்னகரம் 8-வது தெருவில் பகுதியில் உள்ள உந்து கழிவுநீரேற்று நிலையம் மற்றும் பொன்மேனி பகுதியில் உள்ள உபகழிவு நீரேற்று நிலையம் ஆகிய கழிவுநீரேற்று நிலையங்க ளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் லட்சுமணன், செயற் பொறியாளர்கள் பாக்கியலட்சுமி, பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் ேசகர், மக்கள்தொடா;பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ஆறுமுகம், ஆரோக்கிய சேவியர், தியாகராஜன், கந்தப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கேரளாவில் 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார். #nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலர் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.



     நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நர்சு லினிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நர்சுகள் அஞ்சலி செலுத்திய காட்சி.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #nipahvirus




    ×